Last Updated:
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது அந்நாட்டு பாதுகாப்புப் படை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த ஜாயிண்ட் அவாமி ஆக்ஷன் கமிட்டி எனும் அமைப்பிற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதேபோல், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள அரசில், காஷ்மீர் அகதிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் 12 பதவிகளை நீக்கக் கோரிய வழக்கை விசாரித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம், அதற்கு மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டது.
இதனைத் தொடர்ந்து, இந்த இரண்டு விவகாரத்தையும் கையில் எடுத்த போராட்டக்காரர்கள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இன்று இந்தப் போராட்டம் தீவிரம் அடைந்த நிலையில், போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் வெடித்தது.
தொடர்ந்து போராட்டக்காரர்களுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல் பெரிய அளவில் சென்றது. இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் 100க்கும் மேற்பட்டோருக்கு காயமும் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
#WATCH | The situation remains grim in parts of Pakistan-occupied Jammu and Kashmir following fresh clashes between workers of the Joint Awami Action Committee and security forces in Muzaffarabad. Markets have been shut down across the city. pic.twitter.com/s75tU2zzxE
— ANI (@ANI) June 9, 2026
பாதுகாப்புப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 100க்கும் மேற்பட்டோர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்துவருகின்றனர். மறுபக்கம், போராட்டத்தை கட்டுப்படுத்த பாதுகாப்புப் படையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.

