Last Updated:
அடிப்படை உள்கட்டமைப்பு, சமூகப் பாதுகாப்பு, சிறந்த வாழ்வாதாரம் மூலம் நாட்டில் ஏழை மக்களை பொருளாதார மைய நீரோட்டத்தில் அரசு இணைத்துள்ளது
ஏழைகளின் நலனே மோடி அரசின் முதன்மை முன்னுரிமையாகும் என்று மத்திய உள்துறை, கூட்டுறவுத்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
ஏழைகளின் நலனில் கடந்த 12 ஆண்டுகளில் வங்கி வசதிகள், நிதிப் பாதுகாப்பு, சுய வேலைவாய்ப்புகள், உணவு தானியத் திட்டம், பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், ஜன்தன் கணக்குகள் ஆகியவற்றில் கோடிக்கணக்கான மக்களை அரசு இணைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
गरीब कल्याण मोदी सरकार की सर्वोच्च प्राथमिकता है। सरकार ने #12YearsOfGaribKalyan में अन्न योजना, PM आवास, जन-धन, मुद्रा लोन, PM स्वनिधि जैसी कल्याणकारी योजनाओं से करोड़ों नागरिकों को बैंकिंग सुविधा, वित्तीय सुरक्षा और स्वरोजगार के अवसरों से जोड़ा है।
बुनियादी सुविधाओं, सामाजिक… pic.twitter.com/heDC7FSKuX— Amit Shah (@AmitShah) June 8, 2026
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அமித் ஷா கூறியிருப்பதாவது, “ஏழைகளின் நலனே மோடி அரசின் முதன்மை முன்னுரிமையாகும். ஏழைகளின் நலனில் கடந்த 12 ஆண்டுகளில் வங்கி வசதிகள், நிதிப் பாதுகாப்பு, சுய வேலைவாய்ப்புகள், உணவு தானியத் திட்டம், பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், ஜன்தன் கணக்குகள், முத்ரா கடன்கள், பிரதமரின் ஸ்வநிதி திட்டம் ஆகியவற்றில் கோடிக்கணக்கான மக்களை அரசு இணைத்துள்ளது.
அடிப்படை உள்கட்டமைப்பு, சமூகப் பாதுகாப்பு, சிறந்த வாழ்வாதாரம் மூலம் நாட்டில் ஏழை மக்களை பொருளாதார மைய நீரோட்டத்தில் இணைப்பதன் மூலம், வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கான வலிமையான அடித்தளம் கட்டமைக்கப்படுகிறது.” என்று தெரவிக்கப்பட்டுள்ளது.

