Last Updated:
பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், பொது வெளியில் முகக்கவசம் அணிந்து செல்லுமாறும் மாகாண அரசு அறிவுறுத்தி உள்ளது.
ஜப்பானில் விண்ணை முட்டும் அளவுக்கு எரிமலை சாம்பல் புயல் எழுந்ததால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
ஜப்பானின் ககோசிமா மாகாணத்தில் உள்ள சகுர்ஜிமா எரிமலை கடந்த சில நாட்களாக சீற்றத்துடன் காணப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக நேற்று (ஜூன் 7) அதிகாலை மீண்டும் வெடித்துச் சிதறியது. ஜப்பானிய நேரப்படி காலை 5:30 மணிக்குத் தொடங்கிய இந்த வெடிப்பு, காலை 6:52 மணிக்கு இன்னும் பெரிய அளவில் வெடித்ததாக வானிலை செய்திகள் தெரிவிக்கின்றன. எரிமலையில் இருந்து வெளியேறும் சாம்பல் கழிவுகள் ககோசிமா நகரையே மூடும் அளவுக்கு பரவிக் கிடக்கிறது.
Today, a major eruption of Sakurajima caused a massive volcanic ashfall over Kagoshima City, located in Kagoshima Prefecture, Japan. (June 07) pic.twitter.com/omRD9uVeX6
— Weather Monitor (@WeatherMonitors) June 7, 2026
பலத்த காற்றின் காரணமாக, இந்த சாம்பல் மேகங்கள் ககோஷிமா நகரின் பெரும்பகுதியில் பரவி, அங்கு சாம்பல் மழையாகக் கொட்டியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் சாலைகளில் வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. வாகனங்கள், குடியிருப்புகள், வணிக வளாகங்கள் என காணும் இடமெல்லாம் படர்ந்து கிடக்கும் சாம்பல் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் நிலவுகிறது. மேலும் பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், பொது வெளியில் முகக்கவசம் அணிந்து செல்லுமாறும் மாகாண அரசு அறிவுறுத்தி உள்ளது.


