அம்பலங்கொடவின் இடமதோட்டா பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் முகநூல் விருந்து நடத்திய 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 25 ஆண்களும் , 3 பெண்களும் அடங்குவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த முகநூல் விருந்தை நடத்திய ஒரு இளம் பெண்ணிடமிருந்து கஞ்சா, ஐஸ், ஹெரோயின், கொக்கைன் மற்றும் போதை மாத்திரைகள் உள்ளிட்ட பல சட்டவிரோத போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டதாகவும் காவல்துறையினர் கூறுகின்றனர்
சட்டவிரோத போதைப்பொருட்கள்
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18 முதல் 44 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்பதுடன் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளைத் தவிர இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

ரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த இளைஞர்கள் நடத்திய முகநூல் கூட்டத்தில் சோதனை நடத்தப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் இன்று (7) பாலபிட்டிய நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

