சிறிலங்காவின் உள்நாட்டு வருமானவரிச் சட்டம் (Inland Revenue Act) திருத்தப்பட்டு நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக நடைமுறைக்கு வந்துவிட்டது.
புதிய சட்டத்தின் அடிப்படையில் இனிமேல் TIN (Taxpayer Identification Number) எனப்படும் வரிசெலுத்துனர் அடையாள இலக்கம் இல்லாதவர்கள் பல விடயங்களைச் செய்ய முடியாத நிலை வந்துள்ளது.
குறிப்பாக இலங்கையில் பிறந்து தற்போது வெளிநாட்டுக்குடியுரிமைகளைக் கொண்டிருப்போர், இலங்கையில் காணி அல்லது காணி உரிமங்களைப் பதிவு செய்யவும் இனிமேல் இந்த இலக்கத்தைக் கொண்டிருக்க வேண்டியது சட்டப்படிக் கட்டாயம் எனக் குறிப்பிடப்படுவது டயஸ்போரா மக்களுக்குக் கரிசனைக்குரிய விடயமாகும்.
திருத்தப்பட்ட புதிய சட்டத்தின்படி நீங்கள் இலங்கையராகப் பிறந்து இப்போது வெளிநாட்டுப் பிரஜையாக இருந்தாலும் இரட்டைக் குடியுரிமையைக் கொண்டிருந்தாலும் இந்த வரி இலக்கத்தைச் சமர்ப்பிப்பது சட்டப்பூர்வமாகக் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் காணிகள் மற்றும் வீடுகளின் வாடகை போன்ற வருமானங்களைப் பெறுவதற்கும் இந்த அடையாள இலக்கம் தேவையெனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆகமொத்தம் இலங்கையின் நடைமுறைகள் பல விடயங்களில் மாறுகின்றன ஆனால் தமிழர்களின் அரசியல் உரிமையைக் கையாளும் விடயங்களில் எந்த மாற்றமும் இல்லை.
இந்த பின்னணியில் இலங்கையில் பெரும் கொலைகளுக்குப் பின்னால் இருக்கும் சூத்திரதாரிகளில் ஒருவராகக் கூறப்படும் சிறிலங்காவின் முன்னாள் அரச புலனாய்வுச் சேவை இயக்குநர் சுரேஷ் சாலே, இப்போது ஈஸ்டர் சதியில் இருந்து தப்பித்துக்கொள்ளத் தனக்கு கஜினி படப்பாணியில் மறதி மற்றும் தற்கொலைக்குத் தூண்டுவது உட்பட்ட மனநலப் பிரச்சினைகள் இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் புதிய பளிச்சிடல்கள் நேற்று பகிரங்கப்பட்ட நிலையில் இந்த விடயங்களை மையப்படுத்தி வருகிறது செய்திவீச்சு…
https://www.youtube.com/watch?v=EkLIc9Di3eY
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

