மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானுக்குச் சொந்தமான கெஷ்ம் தீவில் உள்ள ஈரானிய இராணுவத்தின் தரைக்கட்டுப்பாட்டு மையம் மீது அமெரிக்க இராணுவம் தற்காப்பு தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் அறிவித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் ஈரான் நடத்த முற்பட்ட தாக்குதல்களுக்குப் பதிலடியாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து, ஈரான் தனது அண்டை நாடுகள் மீது பல பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவித் தாக்குதல் நடத்தியுள்ளது.
எனினும், இந்த ஏவுகணைகள் அனைத்தும் இலக்குகளைத் தாக்கத் தவறிவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஏவுகணைகள் இடைமறிப்பு
குறிப்பாக, குவைத்தை நோக்கி ஈரான் ஏவிய இரண்டு ஏவுகணைகள் இலக்கை அடைவதற்கு முன்னரே நடுவழியில் உடைந்தோ அல்லது விழுந்தோ அழிந்துள்ளதாக தெரியவருகிறது.

Image Credit:
Al Jazeera
மேலும், பஹ்ரைனை இலக்கு வைத்து ஏவப்பட்ட மூன்று ஏவுகணைகள் அமெரிக்க மற்றும் பஹ்ரைன் வான் பாதுகாப்புப் படைகளால் உடனடியாக நடுவானில் இடைமறித்து அழிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவுக்கு பதிலடி
இதேவேளை, கெஷ்ம் தீவில் அமெரிக்கப் படைகள் நடத்திய ” blatant aggression” எனப்படும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைக்குப் பதிலடியாகவே குவைத் மீது தாங்கள் தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகரக் காவலர் படை (IRGC) ஒப்புக்கொண்டுள்ளது.

Image Credit: Al Jazeera
குவைத்தை நோக்கி தாங்கள் குறைந்தது 10 பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாகக் குறிப்பிட்டுள்ள அவர்கள், இந்தத் தாக்குதல்கள் வெறும் ஆரம்பகட்டப் பதில் மட்டுமே என்றும், எதிர்காலத்தில் இதைவிட மிகக் கடுமையான பழிவாங்கும் தாக்குதல்கள் நடத்தப்படும் என்றும் எச்சரித்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

