Last Updated:
70 கிலோவுக்கும் அதிகமான வெடிபொருட்கள் வெடிக்க வைக்கப்பட்டதில் பல பெட்டிகள் தடம்புரண்டுள்ளன. இதில் இரு பெட்டிகள் தீப்பிடித்து எரிந்ததில் 75 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் குவெட்டா அருகே ஜாபர் விரைவு ரயிலில் குண்டு வெடித்ததில் 24 பேர் உயிரிழந்ததால் சோகம் ஏற்பட்டுள்ளது. விடுமுறையில் சென்ற பாதுகாப்புப் படையினரை குறிவைத்த பயங்கரவாதிகள் தாக்குதல் என தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வீரர்களை ஏற்றிச் சென்ற ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட தற்கொலைப்படை குண்டுவெடிப்புத் தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர். குவெட்டாவில் உள்ள சமன் பட்டாக் என்ற இடத்தில் ரயில் சிக்னலைக் கடந்து கொண்டிருந்தபோது, வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட கார் ஒன்று ரயிலின் பெட்டிகளில் மோதி வெடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Balochistan Bleeds Again. Yet another attack on Jaffar Express Train in Quetta. More than 24 lost their lives, nearly 51 passengers injured. Story’s developing. pic.twitter.com/dnWvijGX75
— Zahid Gishkori (@ZahidGishkori) May 24, 2026
இந்தக் கோரத் தாக்குதலால் ரயிலின் இரண்டு பெட்டிகள் தடம் புரண்டு தீப்பிடித்து எரிந்தன. பெஷாவர் நகருக்கு குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்த ராணுவ வீரர்கள் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில், தண்டவாளத்திலிருந்து சுமார் 25 முதல் 30 மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டிருந்த பல கார்கள் முற்றிலுமாக எரிந்து சாம்பலாயின. அதன் அருகில் இருந்த ஒரு சில கட்டடங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன.
காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் ஈடுபட்டனர். இந்தத் தாக்குதலுக்கு பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் என்ற பிரிவினைவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.
May 25, 2026 10:33 AM IST

