Last Updated:
இஸ்ரேல் கடற்படைக் கப்பல் ஒன்று நிவாரணப் படகின் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தடுத்து நிறுத்திய காட்சிகள் வெளியாகியுள்ளன.
காசா பகுதிக்கு நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற சர்வதேசக் கப்பல் குழுவினரை இஸ்ரேல் கடற்படை நடுவழியில் சிறைபிடித்ததால் அதிர்வலை ஏற்பட்டுள்ளது.
சர்வதேச நாடுகளைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் ‘குளோபல் சுமூத் புளோட்டிலா’ (Global Sumud Flotilla) என்ற பெயரில் 50 படகுகளில் காசாவிற்கு நிவாரணப் பொருட்களைக் கொண்டு செல்ல முயன்றனர். அப்போது சர்வதேசக் கடற்பரப்பில், இஸ்ரேல் கடற்படைக் கப்பல் ஒன்று நிவாரணப் படகின் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தடுத்து நிறுத்திய காட்சிகள் வெளியாகியுள்ளன.
At least 15 cases of sexual assaults, including rape.
Shot with rubber bullets at close range.Tens of people’s bones broken.
While the world’s eye is trained on the suffering of our participants, we cannot emphasize enough that this is a mere glimpse of the brutality israel… pic.twitter.com/7h9GUkqfHy
— Global Sumud Flotilla (@gbsumudflotilla) May 22, 2026
மேலும், இஸ்ரேலியப் படை வீரர்கள் படகிற்குள் அத்துமீறி நுழைந்து, 40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த 428 தன்னார்வலர்களைக் கைது செய்துள்ளனர். இந்நிலையில், இஸ்ரேலால் கைது செய்யப்பட்டு துருக்கி வழியாக ஸ்பெயினின் பில்பாவ் நகர விமான நிலையத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்ட குழுவினர் மீது, ஸ்பெயின் நாட்டுப் போலீஸார் திடீரென காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நடத்தி தரதரவென இழுத்துச் சென்ற காட்சிகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இந்தத் தாக்குதல் குறித்து ஸ்பெயின் பாதுகாப்புத் துறை தற்போது விசாரணை நடத்தி வருகிறது.
நிவாரணப் பொருட்கள் ஏற்றிச்சென்ற கப்பல் நடுவழியில் சிறைபிடிப்பு… வெளியானது அதிர்ச்சி வீடியோ!


