என்னதான் அமீரகம் இஸ்ரேலுக்கு ஆதரவு கொடுத்து ஈரான் பலவீனமடைவதை சவுதி வரவேற்றாலும், அந்தப் போரின் முடிவில் மத்திய கிழக்கில் இஸ்ரேல் ஒரே ஆதிக்க சக்தியாக உருவெடுப்பதை சவுதி விரும்பவில்லை. இதனால் இஸ்ரேலுடன் உறவை இயல்பாக்க சவுதி மறுத்து வருகிறது. இஸ்ரேலைச் சார்ந்து இருக்க விரும்பாத சவுதி அரேபியா, பாகிஸ்தான் மற்றும் துருக்கியுடன் இணைந்து ஒரு புதிய பாதுகாப்பு கூட்டணியை உருவாக்கியுள்ளது. அந்த ரகசிய ஒப்பந்தத்தின்படி, சவுதியின் பாதுகாப்பிற்காக பாகிஸ்தான் தனது 8,000 படை வீரர்கள், போர் விமானங்கள், ட்ரோன் பிரிவுகள் மற்றும் சீன தயாரிப்பு வான் பாதுகாப்பு அமைப்பை சவுதியில் நிறுத்தியுள்ளது.


