ஏறாவூர் காவல்துறை பிரிவிலுள்ள மிச்சிநகர் ரெட்பானா வீதியிலுள்ள காணி ஒன்றிலிருந்து பழுதடைந்த கைத்துப்பாக்கி போன்ற ஆயுதம் மற்றும்
வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
வீடு கட்டுவதற்காக குறித்த காணியில் நேற்று புதன்கிழமை (20) அஸ்திவாரம் தோண்டும் போது நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டதாக ஏறாவூர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
சம்பவதினமான நேற்று பிற்பகல் 2.00 மணியளவில் நிலத்தை தோண்டும் போதே இந்த ஆயுதங்கள் புதைக்கப்பட்டிருப்பதை கண்டு காணி உரிமையாளர் காவல்துறையினர் அறியப்படுத்தியதையடுத்து அவை மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஏறாவூர் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

