இலங்கைக்கு வடக்கு திசையில் நிலை கொண்டிருக்கின்ற தாழ் அமுக்கப் பிரதேசம் படிப்படியாக நலிவடைந்து செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இந்த தாழ் அமுக்கப் பிரதேசத்தின் தாக்கத்தின் காரணமாக மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதுடன் வானம் முகில் செறிந்தும் காணப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
அத்தோடு, அனுராதபுரம் மாவட்டத்தில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் பொலனறுவை மாவட்டத்திலும் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

