Last Updated:
குஜராத் தோலேராவில் செமிகண்டக்டர் ஆலையிற்காக டாடா எலக்ட்ரானிக்ஸ், நெதர்லாந்து ஏ.எஸ்.எம்.எல் உடன் எம்.ஓ.யு கையெழுத்து, நரேந்திர மோடி, ராப் ஜெட்டன் சந்தித்து ஒத்துழைப்பு பேச்சு
குஜராத் மாநிலத்தில் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலையை அமைப்பதற்காக, டாடா எலக்ட்ரானிக்ஸ் மற்றும் நெதர்லாந்தின் ஏ.எஸ்.எம்.எல்., நிறுவனங்களுக்கு இடையே பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின.
நெதர்லாந்து நாட்டிற்கு அரசு முறைப்பயணமாக சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு பிரதமர் ராப் ஜெட்டனை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசித்தார். அப்போது பசுமை ஹைட்ரஜன், செமிகண்டக்டர், நீர் மேலாண்மை துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்பின் நெதர்லாந்தின் எரிசக்தி, துறைமுகம், சுகாதாரம், வேளாண்மை, வர்த்தகம், தொழில்நுட்பம் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினர். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, முதலீடு, பாதுகாப்பு போன்ற துறைகளில் ஒத்துழைப்பைப் புதிய பரிமாணங்களுக்குக் கொண்டு செல்லும் வகையில் இருநாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்தார்.
அப்போது, குஜராத் மாநிலம், தோலேராவில் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலையை அமைப்பதற்காக, நெதர்லாந்தின் ஏ.எஸ்.எம்.எல் மற்றும் டாடா எலக்ட்ரானிக்ஸ் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
Delhi,Delhi,Delhi
குஜராத்தில் செமிகண்டக்டர் உற்பத்தி ஆலை.. பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!


