Last Updated:
ராஜஸ்தானில் நீட் தேர்வுக்கு முன்பாக, வினாத்தாள் 2 லட்சம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை விற்பனை நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தை சிபிஐ விசாரித்து வரும் நிலையில் அதிர்ச்சித் தகவல்.
நீட் வினாத்தாள் கசிவு வழக்கில் கைதான மாணவர் ஒருவர், +2 பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்திருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மே 3ஆம் தேதி நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்றது. தேர்வு நடைபெறுவதற்கு முன்பே வினாத்தாள் பல்வேறு இடங்களில் கசிந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, தேர்வு ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், சுமார் 16 பேர் கைது செய்யப்பட்டனரை். கைது செய்யப்பட்ட யாஷ் யாதவ் என்பவர் மூலமே, நீட் வினாத்தாள் மகாராஷ்ட்ரா மாநிலம் நாசிக்கில் இருந்து ராஜஸ்தானுக்கு சென்றது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
யாஷ் யாதவிற்கு, நீட் தேர்வுக்கு தயாரான விகாஸ் பிவால் என்பவருடன் தொடர்பு இருந்ததாகவும், விகாஸ் பிவாலின் தந்தை தினேஷ் பிவால், வினாத்தாளை கையால் எழுதி, அதனை ஸ்கேன் செய்து பிடிஎஃப் ஆக மாற்றியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த பிடிஎஃப், ராஜஸ்தானின் சிகார் பகுதியில் உள்ள பயிற்சி மையங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டதும் தெரியவந்துள்ளது. இதில் யாஷ் யாதவ் ஆயுர்வேத மருத்துவம் படித்து வருவதும், +2 பொதுத்தேர்வில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் 98 விழுக்காடு மதிப்பெண் பெற்று டாப்பராக வந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
விசாரணையில், சில மாணவர்கள் வினாத்தாளைப் பெற 5 லட்சம் ரூபாய் வரை பணம் கொடுத்ததும் தெரியவந்துள்ளது. நீட் தேர்வு பயிற்சி மையத்தின் உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


