
பதவியேற்பு நிகழ்ச்சியை காண ஐயாயிரம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் வருகைக்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், இன்று ஞாயிற்றுக்கிழமை (10) காலை 10 மணிக்கு தமிழக முதலமைச்சராக பதவியேற்கின்றார்.
இதனால் சென்னை நேரு உள்ளக விளையாட்டு அரங்கில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பதவியேற்பு நிகழ்ச்சியை காண ஐயாயிரம் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் வருகைக்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
காவல்துறை தரப்பில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சென்னை காவல்துறை கமிஷனர் தலைமையில் சுமார் 6,000 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் நேரு உள்விளையாட்டு அரங்கின் முக்கிய நுழைவாயில்கள் மற்றும் விஐபி நுழைவாயில்கள் வழியாக மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும், பாதுகாப்பு காரணங்களுக்காக கடுமையான சோதனைகள் நடைபெறும் எனவும் குறிப்பிடப்படுகிறது. விஜய் செல்லும் பாதை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அதேபோல் சென்னை நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

