ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான், காலனித்துவத்தின் அனைத்து வடிவங்களையும் ஈரான் நிராகரிப்பதாக தெரிவித்துள்ளார்.
பரஸ்பர மரியாதை மற்றும் பொதுவான நலன்களின் அடிப்படையிலேயே ஏனைய நாடுகளுடன் ஈரான் தனது உறவைத் தொடரும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்கால உலக அரசியலில் சுரண்டல் கொள்கைகளுக்கு இடமிருக்காது என்று குறிப்பிட்ட அவர், ஈரானிய மக்களின் கலாச்சாரத்தில் சகிப்புத்தன்மை ஆழமாக வேரூன்றி இருப்பதைப் போல, ஒடுக்குமுறைக்கு எதிராகப் போராடுவதும் அந்த மண்ணின் பிரிக்க முடியாத அடையாளம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
பிராந்திய பாதுகாப்பு
இந்த நிலையில், பெசெஷ்கியான் தனது அண்டை நாடுகளுடனான உறவை வலுப்படுத்துவதில் அதிக அக்கறை காட்டி வருவதாக கூறப்படுகிறது.
Image Credit: +972 Magazine
பிராந்தியத்தின் பாதுகாப்பு என்பது அந்தந்த நாடுகளின் கூட்டு முயற்சியாலேயே சாத்தியமாகும் என்று அவர் அண்மையில் அண்டை நாட்டுத் தலைவர்களிடம் வலியுறுத்தியுள்ளார்.
மொஜ்தபாவுடன் மோதல்
எனினும், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தபா கமேனிக்கும் ஜனாதிபதி பெசெஷ்கியானுக்கும் இடையே ஆட்சி நிர்வாகம் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் தொடர்பாகக் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக சில சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை ஒருபுறம் ஆலோசித்துக் கொண்டே, மறுபுறம் தனது ராணுவ வலிமையையும் இறையாண்மையையும் நிலைநாட்டும் இரட்டை நிலைப்பாட்டை ஈரான் தற்போது கையாண்டு வருவதன் பின்னணியில் மேற்படி முரண்பாடு நிலவுவதாக கூறப்படுகின்றது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

