காலியில் இரண்டு வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (07-05-2026) இடம்பெற்றுள்ளது.
போலி அமெரிக்க டொலர்களைத் தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வணிக நிறுவனம்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், ஹபராதுவ காவல் பிரிவிற்குட்பட்ட பிலல்ல பகுதியில் உள்ள தங்குமிடம் ஒன்றில் குறித்த இருவரும் தங்கியிருந்துள்ளனர்.

இந்தநிலையில் வணிக நிறுவனம் ஒன்றில் கொடுக்கல் வாங்கலுக்காக 400 போலி அமெரிக்க டொலரை வழங்கியதாக இவர்கள் மீது முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சோதனையில், சுற்றுலா விசா மூலம் இலங்கையில் தங்கியிருந்த சந்தேக நபர்களிடமிருந்து மேலும் 5,200 போலி அமெரிக்க டொலர் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
மேலதிக விசாரணை
இந்தச் சம்பவம் தொடர்பாக 26 மற்றும் 27 வயதுடைய தஜிகிஸ்தானைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகக் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து ஹபராதுவ காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

