• Login
Sunday, May 3, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

டெல்லி அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து… பரிதாபமாக பலியான 9 பேர் | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
May 3, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
டெல்லி அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்து… பரிதாபமாக பலியான 9 பேர் | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:May 03, 2026 9:25 PM IST

டெல்லியில் நான்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

News18
News18

டெல்லியில் விவேக் விகார் பகுதியில் 4 மாடிகள் கொண்ட குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த குடியிருப்பில் 25-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

ஞாயிறு விடுமுறை என்பதால் சனிக்கிழமை இரவில் பலரும் தாமதமாக தூங்கச் சென்றுள்ளனர். மேலும், வெப்பம் காரணமாக சில வீடுகளில் இரவு முழுவதும் ஏ.சி. ஓடியுள்ளது. அதிகாலை 3.30 மணியளவில் இரண்டாவது தளத்தில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அந்த நேரம் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்ததால் தீப்பற்றியது தெரியாமல் இருந்துள்ளது. இரண்டாவது தளத்தில் பற்றிய தீ, மூன்றாவது, நான்காவது மாடிக்கும் பரவியுள்ளது. இதையடுத்து தான் குடியிருப்புவாசிகள் பதறியடித்து எழுந்துள்ளனர்.

தகவல் அறிந்த போலீசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் மீட்பு படையினருடன் விரைந்து வந்தனர். அதற்குள் கட்டடத்தின் பெரும் பகுதியில் தீ சூழ்ந்ததால் பலரும் உள்ளே சிக்கிக் கொண்டு உயிருக்கு போராடினர். உயிரை பணயம் வைத்து மீட்பு படையினர் உள்ளே சென்று 15 பேரை பாதுகாப்பாக மீட்டனர்.

இருந்த போதும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிலர் உள்ளேயே சிக்கிக் கொண்டனர். நீண்ட போராட்டத்துக்குப் பின் முற்றிலுமாக தீ அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் சிக்கி 9 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயமடைந்த 4 பேருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்கசிவு காரணமாக ஏ.சி. வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இது உறுதி செய்யப்படாததால் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதிகாலையில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் டெல்லியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Read More

Previous Post

Tamilmirror Online || கோட்டையை ஆளப்போவது யார்: வேடசந்தூர் சொல்லும் ராசி

Next Post

லக்னோவின் தொடர் தோல்வி… ரூ. 27 கோடிக்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட் அணிக்கு சுமையாக மாறினாரா?

Next Post
லக்னோவின் தொடர் தோல்வி… ரூ. 27 கோடிக்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட் அணிக்கு சுமையாக மாறினாரா?

லக்னோவின் தொடர் தோல்வி... ரூ. 27 கோடிக்கு வாங்கப்பட்ட ரிஷப் பண்ட் அணிக்கு சுமையாக மாறினாரா?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin