தாய்லாந்திலிருந்து ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ போதைப்பொருட்களை நாட்டிற்கு கடத்தியதாக சந்தேகிக்கப்படும் 22 பிக்குகள் மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, குறித்த பிக்குகள் இன்று (01) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 25 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையம் வழியாக நாட்டிற்குள் நுழைந்த போது, 112 கிலோகிராம் அளவிலான ‘குஷ்’ மற்றும் ‘ஹேஷ்’ போதைப்பொருட்களுடன் குறித்த பிக்குகள் கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர் கைது
இந்தநிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, ‘அமிதானந்தா’ என்ற பிக்கு ஒருவரே இந்த கடத்தல் செயலின் முக்கிய கருத்தாவாக செயற்பட்டது தெரியவந்துள்ளது.

இதற்கமைய கம்பஹா பகுதியில் உள்ள விகாரையொன்றில் பதுங்கியிருந்த நிலையில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நாளை (03.05.2026) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளதாக காவல்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
நீதிமன்றத்தில் முன்னிலை
சந்தேகநபர் அமிதானந்தா தலைமையில் இதற்கு முன்னரும் போதைப்பொருள் கடத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரின் உதவியாளர் ஒருவரையும் அத்துருகிரிய பகுதியில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இதேவேளை சந்தேக நபர்களான 22 பிக்குகளும் 7 நாட்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தனர்.
விசாரணைகள் நிறைவடைந்த நிலையில், சந்தேக நபர்கள் இன்று (02.05.2026) மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

