Last Updated:
பேட்ஸ்மேன் டோனோவன் ஃபெரைரா சிறப்பாக விளையாடி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். அவர் 26 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
பஞ்சாப் அணிக்கு எதிராக முல்லன்பூர் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 222 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்டியது. அணியின் தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடி 44 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்தார்.
இளம் வீரர் பிரியான்ஷ் ஆர்யா 11 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து நல்ல அடித்தளம் அமைத்தார். நடுவரிசையில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 30 ரன்கள் எடுக்க, இறுதி கட்டத்தில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ருத்ரதாண்டவம் ஆடினார்.
அவர் வெறும் 22 பந்துகளில் 62 ரன்கள் (4 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள்) குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ராஜஸ்தான் தரப்பில் யாஷ் ராஜ் புஞ்சா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
223 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு, இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மின்னல் வேகத் தொடக்கம் தந்தார். அவர் வெறும் 16 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார்.
மற்றொரு தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் பொறுப்புடன் விளையாடி 27 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்தார். மிடில் ஆர்டரில் ரியான் பராக் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பேட்ஸ்மேன் டோனோவன் ஃபெரைரா சிறப்பாக விளையாடி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். அவர் 26 பந்துகளில் 52 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.
அவருக்குத் துணையாக ஷுபம் துபே 12 பந்துகளில் 31 ரன்கள் விளாச, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 19.2 ஓவர்களிலேயே 228 ரன்கள் எடுத்து வெற்றி இலக்கை எட்டியது.
Apr 28, 2026 11:13 PM IST


