Last Updated:
இந்தோனேசியா விரைவு ரயில்கள் ஒன்றோடொன்று மோதிக்கொண்ட நிலையில், பெட்டியின் ஜன்னல்களை உடைத்தெறிந்து பயணிகளை மீட்டுள்ளனர் மீட்புப்படையினர்.
இந்தோனேசியாவில் இரு ரயில்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்துள்ளது.
இந்தோனேசியாவின் பெகாசி ரயில் நிலையத்தில் நேற்றிரவு புறநகர் ரயில் மற்றும் நீண்ட தூரம் செல்லும் விரைவு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் புறநகர் ரயிலின் சில பெட்டிகள் கடுமையாக சேதமடைந்தன.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்புக் குழுவினர், ரயில் பெட்டியின் ஜன்னல்களை உடைத்தெறிந்துவிட்டு உள்ளே சிக்கியிருந்த பயணிகளையும், அவர்களது உடைமைகளையும் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில், நான்கு பயணிகள் சடலமாக மீட்கப்பட்டனர். 80-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 10 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர்.
Apr 28, 2026 10:40 AM IST


