Last Updated:
ஐபிஎல் டெல்லி போட்டியில் காயமடைந்த லுங்கி நிகிடி, டெல்லி காவல்துறை கிரீன் காரிடார் மூலம் 11 நிமிடத்தில் மருத்துவமனை, தற்போது நிலை நல்லது, விரைவில் டிஸ்சார்ஜ்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள டெல்லி அணி வீரர் லுங்கி இங்கிடி நல்ல நிலையில் இருப்பதாக அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட்டில் நேற்று டெல்லியில் நடைபெற்ற பஞ்சாப்புக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கேட்ச் பிடிக்க முயன்ற டெல்லி வீரர் லுங்கி இங்கிடி கீழே விழுந்ததில் தலையில் பலத்த அடிப்பட்டது. உடனடியாக மைதானத்திற்குள் ஆம்புலன்ஸ் கொண்டு வரப்பட்டு ஸ்டிரெட்ச்சரில் தூக்கப்பட்ட அவர் அவசர அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
லுங்கி இங்கிடியை விரைவாக மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏதுவாக பச்சை வழித்தடத்தை டெல்லி காவல் துறையினர் உருவாக்கினர். அனைத்து சிக்னல்களிலும் பச்சை விளக்கை எரியவிட்டு போக்குவரத்தை கட்டுப்படுத்தி ஆம்புலன்ஸ் விரைவாக மருத்துவமனை சென்றடைவதை காவல் துறையினர் உறுதிப்படுத்தினர்.
இதனால் 11 நிமிடத்தில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லுங்கி நிகிடி நல்ல உடல் நிலையில் இருப்பதாகவும் விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்பட உள்ளதாகவும் டெல்லி அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


