யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் சம்பவ
இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
திருநகர் பகுதியை சேர்ந்த செல்வம் றொபின் (வயது 43) என்பவரே உயிரிழந்தவராவார்.
யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலையில், சாவகச்சேரி காவல்நிலையத்தை அண்மித்த
பகுதியில் மோட்டார் சைக்கிளிலும் கனரக வாகனமும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட
விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
சாவகச்சேரி காவல்துறையினர் விசாரணை
சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த சாவகச்சேரி காவல்துறையினர், கனரக வாகன
சாரதியை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

