• Login
Wednesday, April 22, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

காதலனை சேரில் கட்டி வைத்து உயிரோடு எரித்த காதலி! அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன? | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
April 22, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
காதலனை சேரில் கட்டி வைத்து உயிரோடு எரித்த காதலி! அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன? | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Apr 22, 2026 4:37 PM IST

பெங்களூருவில் நடந்த இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் தேடிய தகவல்களை கேள்வி விளக்கங்களாக (FAQ’s) பார்க்கலாம்.

News18
News18

கர்நாடக மாநிலம் பெங்களூரு அஞ்சனாபுராவில் காதலனை உயிரோடு எரித்துக் கொன்ற 27 வயது இளம்பெண்ணின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காதலன் உயிருக்குப்போராடி எரிந்து கொண்டிருந்த போதே, அதைத் தடுக்க முயலாமல் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்த பிரேரணாவின் கொடூர செயல் காவல்துறையினரையே அதிர வைத்துள்ளது. தற்போது கைதாகியுள்ள பிரேரணாவிடம் இக்கொலை குறித்த மேலதிக விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் குறித்து நெட்டிசன்கள் தேடிய தகவல்களை கேள்வி விளக்கங்களாக பார்க்கலாம்.

இந்தச் சம்பவம் எப்போது நடந்தது?

இந்தக் கொடூரச் சம்பவம் கடந்த நேற்று காலை 10 மணியளவில் அஞ்சனாபுராவில் உள்ள பிரேரணாவின் வீட்டில் நடந்துள்ளது. வீட்டில் அவரது தாய் மற்றும் சகோதரர் இல்லாத நேரத்தைப் பயன்படுத்தி, தனது காதலன் கிரணை பிரேரணா வரவழைத்துள்ளார்.

கொலை எவ்வாறு நடந்தது?

வீட்டிற்கு வந்த கிரணிடம் சிறிது நேரம் பேசிய பிரேரணா, விளையாட்டாகக் கூறி கிரணின் கண்களைக் கட்டி, அவரது கை மற்றும் கால்களை ஒரு நாற்காலியில் வைத்து இறுக்கமாகக் கட்டியுள்ளார். கிரண் இது குறித்துக் கேட்டபோது, “இது வெளிநாட்டுப் பாணி காதல் புரொப்போசல் (Proposal), அமைதியாக இரு” என்று கூறி அவரை நம்ப வைத்துள்ளார். அந்த நம்பிக்கையில் கிரணும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால், அடுத்த சில நிமிடங்களில் கிரண் மீது பெட்ரோலை ஊற்றி பிரேரணா தீ வைத்துள்ளார். கை, கால்கள் கட்டப்பட்டிருந்ததால் கிரணால் தப்பிக்க முடியாமல் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.

கொலைக்கான காரணம் என்ன?

இருவரும் கடந்த ஒரு ஆண்டாக காதலித்து வந்துள்ளனர். ஒரு தனியார் டெலிகாம் நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்துள்ளனர். கிரண் தன்னை உதாசீனப்படுத்துவதாகவும், திருமணம் செய்துகொள்ள மறுப்பதாகவும் பிரேரணா ஆத்திரத்தில் இருந்துள்ளார். இந்த ஏமாற்றமே கொலையில் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது.

குற்றம் சாட்டப்பட்டவர் என்ன கூறுகிறார்?

ஆரம்பத்தில், தான் கழிவறைக்குச் சென்றிருந்தபோது ஏதோ சத்தம் கேட்டு வெளியே வந்ததாகவும், அப்போது கிரண் தீப்பற்றி எரிந்ததைக் கண்டதாகவும் பிரேரணா நாடகமாடினார். ஆனால், சிசிடிவி (CCTV) காட்சிகளை ஆய்வு செய்தபோது கிரண் கையில் எந்தப் எரிபொருளும் எடுத்து வரவில்லை என்பது உறுதியானது. இதனால் பிரேரணாவின் பொய் அம்பலமானது.

காவல்துறை விசாரணையில் தெரிந்த அதிர்ச்சி தகவல் என்ன?

பெட்ரோலை பிரேரணா முன்கூட்டியே வாங்கி வைத்திருந்தது விசாரணையில் உறுதியாகியுள்ளது. இது திட்டமிட்ட கொலை என்பதை உறுதி செய்கிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, கிரண் தீப்பற்றி எரிந்தபோது, அதைத் தடுக்க முயலாமல் தனது செல்போனில் பிரேரணா முழுமையாகப் வீடியோ பதிவு செய்துள்ளார். இது கொலையின் கொடூரத் தன்மையைக் காட்டுவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

Read More

Previous Post

தமிழகத் தேர்தல் களத்தின் பெரும் கேள்விக்குறியாக விடைபெற்ற விஜய்

Next Post

எதிர்கால தலைமுறையை காக்க இங்கிலாந்து எடுத்த அதிரடி நடவடிக்கை! மன்னர் அனுமதி கொடுத்ததும் நடைமுறைக்கு வந்த சட்டம்

Next Post
எதிர்கால தலைமுறையை காக்க இங்கிலாந்து எடுத்த அதிரடி நடவடிக்கை! மன்னர் அனுமதி கொடுத்ததும் நடைமுறைக்கு வந்த சட்டம்

எதிர்கால தலைமுறையை காக்க இங்கிலாந்து எடுத்த அதிரடி நடவடிக்கை! மன்னர் அனுமதி கொடுத்ததும் நடைமுறைக்கு வந்த சட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin