Last Updated:
ஈரானுடனான போரில் இஸ்ரேல் தன்னை இழுக்கவில்லை என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலும் அமெரிக்காவும் கூட்டாக போர் தொடுத்ததற்குப் பின் ஈரானும் கடும் பதிலடி தரத் தொடங்கியது. ஈரானுக்குத் தக்க பதிலடி தருவதற்காக தாக்குதல்களை அமெரிக்கா தீவிரப்படுத்தியது. இதனால் அமெரிக்காவுக்கு பெரும் பொருட்செலவு ஏற்பட்டது. ஈரானுடனான போரில் பல லட்சம் கோடி ரூபாய்களை அமெரிக்கா செலவழித்ததுடன், அரசியல்ரீதியிலும் தனது பெயரைக் கெடுத்துக் கொண்டது.
இதன் விளைவாக அமெரிக்காவில் அதிபர் டிரம்புக்கு எதிராக கண்டனக் குரல்கள் கடுமையாக எழுந்தன. இஸ்ரேல் நாட்டின் போரில் அமெரிக்கா தேவையில்லாமல் தலையிட்டுவிட்டதாகவும் ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்றும் விமர்சனக் கணைகள் தொடுக்கப்பட்டன.
இந்நிலையில், தனது ட்ரூத் சமூகவலைகளத்தில் விளக்கம் அளித்துள்ள டிரம்ப், ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கவே கூடாது என்ற உறுதிப்பாடே அந்நாட்டின் மீது போர் தொடுக்கக் காரணம் என்றும் அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் வென்றதை முறைகேடு என விமர்சிக்கும் பொய்ப் பண்டிதர்கள் கூறும் இதர காரணங்களை நம்பத் தேவையில்லை என்றும் விளக்கம்
அளித்துள்ளார்
ஈரானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஆட்சியாளர்கள் புத்திசாலித்தனமாக செயல்பட்டால் எதிர்காலம் வெற்றிகரமாக அமையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Apr 21, 2026 11:35 AM IST


