ஈரானுடன் ஒரு புதிய உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வதற்குத் தன் மீது எவ்வித அழுத்தமும் இல்லை என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், அந்த ஒப்பந்தம் ஒப்பீட்டளவில் மிக விரைவில் எட்டப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹார்முஸ் நீரிணையில் போர்ப் பதற்றம் நீடித்து வரும் சூழலில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தனக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் அடிப்படையற்றவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
பரப்பப்படும் வதந்திகள்
தாம் ஒப்பந்தத்திற்காக அவசரப்படுவதாகப் பரப்பப்படும் வதந்திகள் திட்டமிட்ட போலிச் செய்திகள் எனச் சாடிய ட்ரம்ப், இத்தகைய வதந்திகளுக்குப் பின்னால் ஜனநாயகக் கட்சியினரே இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவின் நலன்களுக்குக் குந்தகம் ஏற்படாத வகையில் மிகச் சரியான தருணத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்பதில் அவர் உறுதியாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஒருபுறம் கடற்படை முற்றுகையைத் தீவிரப்படுத்தி வந்தாலும், மறுபுறம் இராஜதந்திர ரீதியிலான தீர்வுக்குத் தாம் இன்னும் தயாராக இருப்பதையே ட்ரம்பின் இந்தக் கருத்து உணர்த்துவதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

