Last Updated:
இந்த வெற்றியின் மூலம் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும் தகுதியை வைஷாலி பெற்றுள்ளார்
ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை கிராண்ட் மாஸ்டர் வைஷாலி பெற்றுள்ளார்.
சைப்ரஸ் நாட்டில் உள்ள பாஃபோஸ் நகரில் கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி நடைபெற்றது. இதில், மகளிர் பிரிவில் நேற்று நடைபெற்ற 14 ஆவது மற்றும் இறுதிச் சுற்று ஆட்டத்தில், வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய தமிழ்நாட்டை சேர்ந்த வைஷாலி, ரஷ்யாவின் அனுபவ வீராங்கனையான கேடரினா லாக்னோவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 48 ஆவது நகர்த்தலில் வைஷாலி அபார வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்து அசத்தினார்.
இதன் மூலம் ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் மகளிர் பிரிவில் பட்டம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார்.
இந்த வெற்றியின் மூலம் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ள உலக சாம்பியன்ஷிப் போட்டியில் விளையாடும் தகுதியை வைஷாலி பெற்றுள்ளார். அங்கு அவர் நடப்பு உலக சாம்பியனான சீனாவின் ஜு வென்ஜுனை எதிர்கொள்ள உள்ளார்.
வைஷாலியின் இந்த வெற்றி, இந்தியாவில் சதுரங்க விளையாட்டில் ஈடுபடும் இளைய தலைமுறை வீராங்கனைகளுக்கு ஒரு பெரும் ஊக்கமாகவும், தமிழக சதுரங்கப் பள்ளிக்குக் கிடைத்த மற்றுமொரு மகுடமாகவும் அமைந்துள்ளது.
ஆடவர் பிரிவில் தற்போதைய கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன் சிந்தாராவ் உலக சாம்பியனான தமிழக வீரர் குகேஷ் உடன் மோத உள்ளார்.


