Last Updated:
KYC என்பது உங்களுடைய அடையாளம் மற்றும் முகவரியை சரி பார்ப்பதற்கான ஒரு கட்டாயமான செயல்முறை ஆகும். இது பணமாற்று மோசடிகளை தடுப்பதற்கு உதவுகிறது.
நீண்டகால செல்வத்தை அமைப்பதற்கு முதலீடு செய்வது என்பது மிகவும் எளிமையான வழிகளில் ஒன்றாக அமைகிறது. ஆனால் இதற்கான முதல் படி என்பது எப்பொழுதும் சில அடிப்படை கேள்விகளோடு தொடங்குகிறது. இதற்கு தேவையான ஆவணங்கள் என்ன?, நேரடியாக ஃபண்ட் ஹவுஸில் முதலீடு செய்ய வேண்டுமா அல்லது டிஸ்ட்ரிபியூட்டர் மூலமாக முதலீடு செய்ய வேண்டுமா? என்ற கேள்விகள் எழுகிறது.
இதற்கான கமிஷன் எப்படி இயங்குகிறது? என்பது போன்ற கேள்விகள் இதில் அடங்கும். எனவே, நீங்கள் முதல்முறையாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யப் போகிறீர்கள் என்றால் இந்த பதிவு ஒரு மியூச்சுவல் ஃபண்ட் அக்கவுண்ட்டை எப்படி திறப்பது, KYC செயல்முறையை நிறைவு செய்வது போன்றவற்றில் ஆரம்பித்து உங்களுடைய முதலீட்டு பயணத்தை துவங்குவதற்கு தேவையான அனைத்து தகவல்களையும் வழங்கும்.
மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு உங்களிடம் பெர்மனென்ட் அக்கவுண்ட் நம்பர் (PAN), முகவரி சான்றிதழ் (பாஸ்போர்ட், ஆதார் அல்லது ஓட்டுநர் உரிமம்) மற்றும் ஒரு பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இருக்க வேண்டும். நீங்கள் 50,000 ரூபாய்க்கும் குறைவாக முதலீடு செய்யப் போகிறீர்கள் என்றால் PAN கார்டு அதற்கு அவசியம் இல்லை. அதே சமயத்தில் பண பரிமாற்றங்கள் செய்வதற்கு உங்களிடம் ஒரு வங்கி கணக்கு இருக்க வேண்டும்.
மியூச்சுவல் ஃபண்டுகளை பொறுத்த வரை இரண்டு விதமான திட்டங்கள் உள்ளன: ஒன்று டைரக்ட் மற்றொன்று ரெகுலர். ரெகுலர் திட்டங்களை பொறுத்தவரை ஒரு டிஸ்ட்ரிபியூட்டர் மூலமாக நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். அதேபோல டைரக்ட் திட்டங்களில் நீங்கள் நேரடியாக மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்ய ஆரம்பிக்கலாம். இதன் மூலமாக இடைத்தரகரை நீங்கள் தவிர்க்கலாம். நேரடித் திட்டங்களுக்கு வழக்கமாக செலவு விகிதம் ஒரு சதவீதம் இருக்கும் போது, ரெகுலர் திட்டங்களுக்கான செலவு விகிதம் என்பது இரண்டு சதவீதம் வரை ஆகலாம்.
ஒருவேளை நீங்கள் ஒரு டிஸ்ட்ரிபியூட்டர் மூலமாக முதலீடு செய்யப் போகிறீர்கள் என்றால் அதற்கான கமிஷன் என்பது திட்டத்தின் NAVயிலிருந்து நேரடியாக பிடித்தம் செய்யப்படும். இதற்கான கட்டணம் தனியாக காண்பிக்கப்படாது. அதனை நீங்கள் உங்களுடைய ஸ்டேட்மெண்ட்களில் பார்க்கலாம். ஒருவேளை நீங்கள் பதிவு செய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகருடன் இணைந்து முதலீடு செய்யப் போகிறீர்கள் என்றால் அவர் வழங்கும் சேவைகளுக்கு நீங்கள் கட்டணம் செலுத்த வேண்டும். கமிஷன் கட்டணங்களை தவிர்ப்பதற்கு நீங்கள் ஃபண்டு ஹவுஸில் நேரடியாக முதலீடு செய்யலாம். முதலீடு செய்வதற்கு முன்பு KYC -ஐ நிறைவு செய்ய வேண்டும் என்று என்னுடைய ஃபண்ட் ஹவுஸ் கூறுகிறது. ஏற்கனவே என்னுடைய வங்கியில் நான் KYC ஆவணங்களை நிறைவு செய்து விட்டேன். இப்பொழுது மீண்டும் அதனை நான் செய்ய வேண்டுமா?
KYC என்பது உங்களுடைய அடையாளம் மற்றும் முகவரியை சரி பார்ப்பதற்கான ஒரு கட்டாயமான செயல்முறை ஆகும். இது பணமாற்று மோசடிகளை தடுப்பதற்கு உதவுகிறது. ஆதார் அடிப்படையிலான KYC என்பது OTP மூலமாக சரிபார்ப்பு செயல்முறையை மிகவும் எளிமையாகவும், விரைவாகவும் செய்கிறது. இது ஆவணங்களின் தேவையை குறைத்து, செயல்முறையை விரைவாக்குகிறது.
நீங்கள் குறைந்தப்பட்சமாக 500 ரூபாயிலிருந்து முதலீடு செய்யலாம். முதலீட்டு தொகைக்கான குறைந்தபட்ச வரம்பு என்பது குறிப்பிட்ட திட்டம் மற்றும் SIP பொருத்து மாறுபடும். எனவே உங்களுடைய இலக்கு தொகை, கால அளவு மற்றும் ஃபண்டு வகையை பொறுத்து நீங்கள் எவ்வளவு தொகையை முதலீடு செய்யலாம் என்பதை நீங்களே முடிவு செய்யலாம்.


