முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாக முன்னாள் ஆளுநரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமனா சுரேன் ராகவன் கவலை தெரிவித்துள்ளார்.
டக்ளஸ் தேவானந்தா கடந்த காலங்களில் தனது அரசியல் எதிரிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சியில் இருந்து தப்பியவர் என அவர் தெரிவித்துள்ளார்.
நெருக்கடியான சூழலில் அவரை வைத்திருப்பது அவரது உயிருக்கும் அரசியல் எதிர்காலத்திற்கும் அச்சுறுத்தலாக அமையலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் உறுதி
அவர் தவறு செய்திருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்குமாரு சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அவருக்கு வழங்கப்பட வேண்டிய முழுமையான பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் வலியுருத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

