• Login
Thursday, December 25, 2025
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

வீட்டுப்பாடம் முடிக்காத பிஞ்சுக் குழந்தையை கொடூரமாக தண்டித்த ஆசிரியைகள்…! கொந்தளிக்கும் மக்கள்… | இந்தியா

GenevaTimes by GenevaTimes
November 27, 2025
in இந்தியா
Reading Time: 2 mins read
0
வீட்டுப்பாடம் முடிக்காத பிஞ்சுக் குழந்தையை கொடூரமாக தண்டித்த ஆசிரியைகள்…! கொந்தளிக்கும் மக்கள்… | இந்தியா
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:November 27, 2025 10:22 PM IST

சத்தீஸ்கர் மாநிலத்தில் வீட்டுப்பாடம் செய்ய தவறியதற்காக, ஒரு மாணவனை அவனால் ஒருபோதும் மறக்க முடியாத வகையில் 2 ஆசிரியைகள் தண்டித்து உள்ளனர்.

Rapid Read
News18
News18

சத்தீஸ்கரில் உள்ள சூரஜ்பூர் மாவட்டத்தில் இருந்து பெற்றோர்களை கொந்தளிக்க வைக்கும் வகையில் நடந்த சம்பவம் ஒன்று வெளிவந்துள்ளது. ஹோம் ஒர்க் (வீட்டுப்பாடம்) செய்ய தவறியதற்காக, ஒரு மாணவனை அவனால் ஒருபோதும் மறக்க முடியாத வகையில் 2 ஆசிரியைகள் தண்டித்து உள்ளனர்.

அதிலும் தண்டிக்கப்பட்ட மாணவனின் வயது என்ன தெரியுமா? வெறும் 4 மட்டுமே. ஆம், நான்கு வயது பிஞ்சு மாணவன் ஒருவனே ஆசிரியைகளால் தீவிரமாக தண்டிக்கப்பட்டு உள்ளான். வீட்டுப் பாடத்தை முடிக்காததற்காக தண்டனையாக குறிப்பிட்ட நான்கு வயது மாணவன் தனது பள்ளி வளாகத்திற்குள் ஒரு மரத்தில் தொங்கவிடப்பட்டதுதான் வேதனையின் உச்சம். இந்த சம்பவம் நாடு முழுவதும் உள்ள பெற்றோர்களுக்கு மிகவும் கவலையளிக்க கூடியதாக அமைந்துவிட்டது.

இந்தச் சம்பவம் சத்தீஸ்கரின் சூரஜ்பூர் மாவட்டத்தில் நாராயண்பூர் என்ற கிராமத்தில் அமைந்துள்ள ஹான்ஸ் வாஹினி வித்யா மந்திர் என்ற நர்சரிப் பள்ளியில் நடந்துள்ளது. தகவல்களின்படி, குழந்தையின் ஆசிரியை, குறிப்பிட்ட குழந்தை வீட்டுப்பாடம் செய்யவில்லை என்பதை கண்டறிந்தார். இதனால் கோபமடைந்த அந்த ஆசிரியை வகுப்பறையிலிருந்து அந்த பிஞ்சு மாணவனை வெளியே அழைத்துச் சென்று பின்னர் அந்த குழந்தையின் சட்டையை ஒரு கயிற்றில் கட்டி, பள்ளி வளாகத்திற்குள் உள்ள ஒரு மரத்தில் அந்த கயிற்றோடு சேர்த்து தொங்கவிட்டுள்ளார். இந்த கொடூர தண்டனையை பிஞ்சு மாணவனுக்கு வழங்க அதே பள்ளியை சேர்ந்த மற்றொரு ஆசிரியையும் உதவி செய்துள்ளார்.

பள்ளிக்கு அருகில் உள்ள ரூஃப்டாப் ஒன்றின் மீதிருந்து ஒரு இளைஞனால் பதிவு செய்யப்பட்ட இந்த சம்பவம் தொடர்பான கொடூரமான வீடியோவானது, காஜல் சாஹு மற்றும் அனுராதா தேவாங்கன் என அடையாளம் காணப்பட்ட இரண்டு ஆசிரியைகள் அருகில் நிற்கும்போது, குறிப்பிட்ட 4 வயது குழந்தை உதவியற்ற முறையில் மரத்தில் கட்டி தொங்கவிடப்பட்டுள்ளதைக் காட்டுகிறது.

மேலும், அந்த குழந்தை தன்னை காப்பாற்றச் சொல்லி கதறி அழும் நிலையில், ஆசிரியைகள் எந்த இரக்கமும் காட்டாமல் நிற்பதும் வீடியோவில் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் வேகமாக வைரலானதைத் தொடர்ந்து குறிப்பிட்ட பள்ளி நிர்வாகம் தனது “மோசமான தவறை” ஒப்புக்கொண்டு பொது மன்னிப்பு கோரியது.

இதையும் படிங்க: விரைவில் பெரிய அளவில் மேம்படுத்தப்பட உள்ள இந்திய ரயில்கள்…! லிஸ்ட் இதோ…

இதற்கிடையில், மாவட்ட கல்வி அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். தொகுதி கல்வி அதிகாரியின் கூற்றுப்படி கிளஸ்டர்-இன்-சார்ஜ், மூத்த மாவட்ட அதிகாரிகளுக்கு விரிவான அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். உரிய விசாரணைக்குப் பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். அதிர்ஷ்டவசமாக கொடூரமாக தண்டிக்கப்பட்ட குழந்தை பாதுகாப்பாகவும், காயமின்றியும் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே 2 ஆசிரியைகளால் கொடூரமாக தண்டிக்கப்பட்ட குழந்தையின் உறவினரான சந்தோஷ் சாஹு, என்பவர் தனது குடும்பத்தினர் முறையான புகார் அளிக்கத் தயாராகி வருவதாக கூறினார். “வீட்டுப் பாடத்தை முடிக்காததற்காக ஒரு குழந்தை இப்படி தண்டிக்கப்பட்டால், இந்தப் பள்ளியில் வேறு என்ன நடக்கிறது என்று கற்பனை செய்து பாருங்கள்” என்று சாஹு தனது பயத்தையும் வெளிப்படுத்தினார்.

கூகுள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். முக்கிய செய்திகள், விரிவான அலசல்கள், அரசியல் முதல் குற்ற செய்திகள் வரை அனைத்தையும் பெறுங்கள். சமீபத்திய தேசிய செய்திகளை நியூஸ்18 தமிழில் மட்டுமே தெரிந்து கொள்ளுங்கள்.
First Published :

November 27, 2025 10:22 PM IST

தமிழ் செய்திகள்/இந்தியா/

வீட்டுப்பாடம் முடிக்காத பிஞ்சுக் குழந்தையை கொடூரமாக தண்டித்த ஆசிரியைகள்…! கொந்தளிக்கும் மக்கள்…

Read More

Previous Post

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் இன்றி பயணிக்கலாம்!

Next Post

‘WTC ஃபைனலுக்கு இந்தியா முன்னேறினால் அது அதிசயம்தான்’

Next Post
‘WTC ஃபைனலுக்கு இந்தியா முன்னேறினால் அது அதிசயம்தான்’

‘WTC ஃபைனலுக்கு இந்தியா முன்னேறினால் அது அதிசயம்தான்’

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin