தேயிலைத் தோட்டத் தொழில் தொடங்கி 200 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளதை முன்னிட்டு அஸ்ஸாமில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார்.
முன்னதாக தலைநகர் கெளஹாத்தியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் வாகனப் பேரணி நடைபெற்றது. இதில் சாலையின் இருபுறமும் தொண்டர்கள், மக்கள் காத்திருந்து மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

