• Login
Tuesday, March 17, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home வணிகம்

85,000 விசாக்கள் ரத்து; அமெரிக்கா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை

GenevaTimes by GenevaTimes
December 11, 2025
in வணிகம்
Reading Time: 1 min read
0
85,000 விசாக்கள் ரத்து; அமெரிக்கா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை, அமெரிக்கா வெளிநாட்டவர்களின் 85,000 விசாக்களை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை, ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவை “மீண்டும் பாதுகாப்பானதாக” மாற்றுவதற்கான அவரது தீவிர முயற்சிகளின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. வெளியுறவுத்துறை அதிகாரிகள், இந்த ஆண்டு வழங்கப்பட்ட விசா ரத்துகள் கடந்த ஆண்டை விட இருமடங்கு அதிகம் என குறிப்பிட்டுள்ளனர்.

ரத்து செய்யப்பட்ட விசாக்களில், 8,000க்கும் மேற்பட்டவை மாணவர் விசாக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நடவடிக்கைகளில் பாதி அளவுக்கு காரணமாக இருந்தவர்கள், தாக்குதல்கள், திருட்டுகள் போன்ற குற்றங்களில் ஈடுபட்டவர்களும், அமெரிக்க தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருந்தவர்களும் ஆவர். “இவர்கள் நம் சமூகங்களுக்கு நேரடியான அபாயத்தை உருவாக்குபவர்கள். அவர்களை நாம் விரும்பவில்லை,” என அதிகாரி ஒருவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், விசா வழங்குவதில் தூதரக அதிகாரிகள் ஒரு காரணியை மட்டும் மதிப்பிடாமல், விண்ணப்பதாரரின் முழுமையான பின்னணி, சமூக தொடர்புகள், சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான தகவல்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த சூழ்நிலையையும் கவனமாக மதிப்பீடு செய்வதாக வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

ஒரு விண்ணப்பதாரர் அமெரிக்க பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என உறுதி செய்யப்படும் வரை விசா வழங்கப்பட மாட்டாது எனவும், அதற்குத் தேவையான அனைத்து நேரத்தையும் எடுத்துக்கொள்ள அமெரிக்கா தயாராக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த வாரம் வாஷிங்டனில் வெள்ளை மாளிகை அருகே ஓர் பெண் பாதுகாப்பு அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், வெளிநாட்டவர்களுக்கான விசா வழங்கும் செயல்முறையில் மேலும் கணிசமான கடுமையான கட்டுப்பாடுகளை அமெரிக்கா அறிமுகப்படுத்த வழிவகுத்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள நியூஸ்21 WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW

Listen Live on Aha FM Your Favorite Online Tamil Radio!

Read More

Previous Post

Ind vs SA | இந்திய பவுலர்களை பறக்கவிட்ட டி காக்.. இந்தியாவுக்கு 214 ரன்கள் இலக்கு | விளையாட்டு

Next Post

மோடி – டிரம்ப் தொலைபேசியில் உரையாடல்.. இந்தியா – அமெரிக்கா உறவில் புதிய திருப்பம் ஏற்படுமா? | உலகம்

Next Post
மோடி – டிரம்ப் தொலைபேசியில் உரையாடல்.. இந்தியா – அமெரிக்கா உறவில் புதிய திருப்பம் ஏற்படுமா? | உலகம்

மோடி - டிரம்ப் தொலைபேசியில் உரையாடல்.. இந்தியா - அமெரிக்கா உறவில் புதிய திருப்பம் ஏற்படுமா? | உலகம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin