55 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட மலேசியர்களை பாதிக்கும் 83.4% பெருங்குடல் புற்றுநோய் நோயாளிகளை சுகாதார அமைச்சகம் சமீபத்தில் கண்டறிந்துள்ளது. அதன் மருத்துவ மேம்பாட்டுப் பிரிவின் இயக்குனர் டத்தோ டாக்டர் முகமட் அஸ்மான் யாக்கோப், நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் பெரும்பாலும் மூன்றாவது அல்லது நான்காவது நிலைகளில் மருத்துவ உதவியை நாடுகின்றனர் என்று தனது கவலைகளை சுட்டிக்காட்டினார் என்று ஹரியான் மெட்ரோ தெரிவித்துள்ளது.
பெருங்குடல் புற்றுநோய் குறித்த பொது விழிப்புணர்வு மற்றும் ஆரம்பகால பரிசோதனைகளின் முக்கியத்துவம் இந்த நாட்டில் குறைவாகவே உள்ளது. மூன்றால் அல்லது நான்காம் நிலை புற்று நோய் கண்டறியப்பட்டால் ஐந்தாண்டுக்கும் குறறைவானவே அவர்கள் வாழ்நாள் இருக்கிறது என்று அவர் மேற்கோள் காட்டினார். நோய்க்கான ஆரம்ப பரிசோதனைகள் சிகிச்சை செலவைக் குறைக்கும் மற்றும் நோயாளியின் சிறந்த வாழ்க்கைத் தரத்தை உறுதி செய்யும் என்றும், ஆரம்ப நிலையில் இந்நோயினை கண்டறிந்தால் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும் என்றும் அஸ்மான் நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், பிற இனக்குழுக்களுடன் ஒப்பிடும்போது நாட்டில் சீன சமூகத்தினர் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று அஸ்மான் கூறினார். பெருங்குடல் புற்றுநோயானது பெரிய குடலை உள்ளடக்கியது. ஆண்களுக்கு ஏற்படும் மிகவும் பொதுவான புற்றுநோய் இந்த பெருங்குடல் புற்றுநோய் எனவும் மார்பக புற்றுநோய்க்கு அடுத்தபடியாக பெண்களிடையே இரண்டாவது மிகவும் பொதுவானதாக இது இருக்கிறது என்றும் அஸ்மான் விளக்கினார்.
வயிற்றுப்போக்கு, இரத்தம் தோய்ந்த மலம், வயிற்று வலி, மலச்சிக்கல், அதிக்கபடியான எடை இழப்பு, சோர்வு மற்றும் குறைந்த இரும்பு அளவு ஆகியவை பொதுவான அறிகுறிகளாகும். உலக சுகாதார அமைப்பு (WHO) படி, இந்த அறிகுறிகள் பொதுவாக நோயின் ஆரம்ப கட்டங்களில் தெரிவதில்லை.


