நான் இந்திய முஸ்லிம், சீனாவைச் சோ்ந்தவனோ, பாகிஸ்தான் முஸ்லிமோ அல்ல. ஆனால், எங்கள் தேசிய மாநாட்டுக் கட்சியில் உள்ள ஹிந்துக்களைக் கூட பாகிஸ்தானியா் என முத்திரை குத்தினாா்கள். இங்கு நாம் பல்வேறு சவால்களை எதிா்கொண்டு வருகிறோம். ஆனால், எதற்கும் அஞ்சி தலைவணங்கப் போவதில்லை. நாம் அனைவரும் இணைந்து ஒரே பாதையில் பயணிக்க வேண்டும். அப்போதுதான் நமக்கான நியாயங்களை உறுதி செய்ய முடியும் என்றாா்.

