இலங்கையின் பாதுகாப்புப் பலத்திற்கு சர்வதேச பாராட்டு
அண்மையில் இலங்கையில் நடைபெற்ற இந்தியா – பாகிஸ்தான் இடையிலான டி20 கிரிக்கெட் போட்டியானது, வெறும் விளையாட்டாக மட்டுமன்றி இராஜதந்திர மற்றும் சர்வதேச ரீதியில் மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகப் பார்க்கப்பட்டது.
இந்தப் போட்டியின் முக்கியத்துவத்தைக் கருத்திற்கொண்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதிகளவிலான படையினர் குவிக்கப்பட்டு மிகப்பாரிய பாதுகாப்பு வளையத்திற்குள் போட்டி நடத்தப்பட்டது.
எவ்விதமான அசம்பாவிதங்களும் இன்றி, நாட்டின் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை எவ்வகையிலும் கேள்விக்குட்படுத்தப்படாத வகையில் இந்தப் போட்டி மிகவும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது.
இந்தநிலையில், சர்வதேச நாடுகள் மோதிக்கொள்ளும் இத்தகைய முக்கிய நிகழ்வை அமைதியான முறையில் கையாண்டமைக்காகவும், இப்போட்டியைச் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தியதற்காகவும் பாகிஸ்தான் மற்றும் இந்தியத் தரப்புகள் இலங்கைக்குத் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்திருந்தன.
இது குறித்தும் மற்றும் தற்போதைய அரசியல் களம் குறித்தும் பிரித்தானியாவிலுள்ள இராணுவ ஆய்வாளர் அருஸ் தெரிவித்த விரிவான கருத்துகளுடன் வருகின்றது இன்றைய ஊடறுப்பு…
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்…! |

