அண்ணாமலை செய்தது என்ன?
நேற்று அறிவித்தபடி, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், நியாயம் கேட்டு தன்னைத் தானே சாட்டையால் அடித்துக்கொண்டார் பாஜக மாநிலத் தலைவர், அண்ணாமலை. கோவையில் உள்ள தன்னுடைய வீட்டின் வெளியே, பச்சை நிற வேட்டி அணிந்து, சட்டை அணியாத உடலுடன் தோன்றிய அண்ணாமலை, சில தொண்டர்கள் பதாகை ஏந்தி எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருக்க, சாட்டையால் தன்னைத் தானே 6 முறை அடித்துக் கொண்டார்.

