தாப்பா,
தாப்பா வாழ் மக்களுக்கு சௌகரியமான வாழ்க்கைக்கும் நலன்களுக்கும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு வீடமைப்பு. ஊராட்சித்துறை அமைச்சு 6.13 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்திருக்கிறது. மொத்தம் 33 பொது அடிப்படை வசதிகள், கட்டடங்கள் இத்திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படும் என்று அதன் அமைச்சர் கோர் மிங் கூறினார்.

ஊராட்சி இலாகா கீழ் 30 லட்சத்து 50 ஆயிரம் ரிங்கிட் செலவில் 16 திட்டங்கள் மேற்கொள்ளப்படும். அதேசமயத்தில் சீன புது கிராம மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 10 திட்டங்கள் அமல்படுத்தப்படும். இவற்றில் புதிய சாலைகள் அமைப்பது, பொதுக் கழிப்பறை, கால்வாய்கள். பொது மண்டபம் ஆகியவற்றைத் தரம் உயர்த்தும் பணிகள் அடங்கும் என்று இங்கு வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில் அவர் தெரிவித்தார். இதற்காக 18 லட்சத்து 65,319 ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது.

தாப்பா நகராண்மைக்கழகத்தின் வழி தாமான் மலேசியா தர உயர்வுக்கு 7 லட்சத்து 96,400 ரிங்கிட் ஒதுக்கப்பட்டிருக்கிறது. தாமான் ஸ்ரீ கெமிலாங், தாமான் ஸ்ரீ பீடோர் ஆகிய பகுதிகளில் தேசிய வீடமைப்பு இலாகா வழி குடியிருப்பு செதிகளை மேம்படுத்தும் பணிகளக்கு வட்சத்து 77 ஆயிரம் சிங்கிட் நிதி இதுக்கப்பட்டிருக்கிறது. சமூக நல்வாழ்வுப் பிரிவின் கீழ் தாப்பா ரோடு, சென்டிரியாங் பகுதிகளில் வீடுகளை மேம்படுத்தும் இரண்டு திட்டங்களுக்கு 40 ஆயிரம் சிங்கிட் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
நாப்பா தாமான் மலேசியா தர உயர்வுத் திட்டத்தை நேரடியாக ஆய்வு செய்வதற்கு அமைச்சர் அங்கு வருகை புரிந்தார். இங்கு சிறார் விளையாட்டு வசதிகள், குப்பைத் தொட்டிகள். பூங்கா மேஜைகள், எச்சரிக்கைப் பலகைகள், அலங்கார வளைவுகள், நடைபாதைகள் ஆகியவை அமைக்கப்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தாப்பா” ரோட்டில் உள்ள பொதுச் சந்தைக் கழிப்பறை, அங்காடிக் கடைகள் ஆகியவற்றுக்கும் வருகை புரிந்த ஙா கோர் மிங், இவை பொதுமக்களின் வசதிக்காக தரம் உயர்த்தப்படும். பழைய பொருட்கள் மாற்றப்பட்டு புதிய பொருட்கள் பொருத் தப்படும் என்று தெரிவித்தார்.

மக்களின் நல்வாழ்வு, சௌகரியம், பாதுகாப்பு ஆகியவற்றில் வீடமைப்பு, ஊராட்சித்துறை அக்கறையும் பரிவும் கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே சான்று. தொடர்ந்து தாப்பா ரோட்டில் உள்ள கம்போங் மா தேவுக்கு வருகை புரிந்த அமைச்சர், அங்குள்ள வீடுகள் சீரமைக்கப்படுவதை நேரில் கண்டார்.
அதேசமயம் அங்குவாழும் மக்களோடு அவர் அளவளாவி மகிருந்தார். அதையடுத்து ஆயர் கூனிங் பொதுச் சந்தைக்கு வருகை புரிந்து அதன் தர உயர்வுப் பணிகளை ஆய்வு செய்தார். சந்தைக்கு வரும். பொறு மக்கள் சௌகரியமாகவும் பாதுகாப்பாகவும் கொள்முதல் செய்வதற்கு யாதியாக தர உயணி மேற்கொள் அப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில் அவரின் இவ்வருகை அமைந்தது. மேலும் கம்போஃர் பாரு பகுதியில் வீடுகள் பழுதுபா பார்க்கப்படும் பணிகளை அவச தேரில் பார்வையிட்டார்.

மடானி அரசாங்கத்தின் மக்கள் நல்வாழ்வுக்காக இத்திட்டங்கள் மேற்கொள் எப்படுவதை அவர் சுட்டிக்காட்டினர், ஒவ்வொரு மாநிலத்திலும் சபா, சரவாக் உட்பட கூட்டரசுப் பிரதேசங்களிலும் மக்கள் நல்வாழ்வில் அடிப்படை வசதிகளை மடானி அரசாங்கம் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இந்த மேம்பாட்டுப் பணிகளில் இருந்து யாரும் விடுபட்டு விடக்கூடாது என்பதில் மத்திய அரசாங்கம் மிக உறுதியாக இருக்கிறது.
வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சு அங்கீகரித்திருக்கும் ஒதுக் கீடுகள் பட்ஜெட் அடிப்படையில் செயல் திறன் எனும் கோட் பாட்டின் கீழ் மேம்பாட்டுப் பணிகள், தர உயர்வுப் பணிகள் மேற் கொள்ளப்படுகின்றன என்றும் அமைச்சர் ஙா கோர் மிங் கூறினார்.


