இந்த நிலையில், டிரம்பின் எச்சரிக்கையை மீறி ஈரானிடம் கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருள்களை வாங்கிய 20 நிறுவனங்கள் அமெரிக்காவில் வர்த்தகம் செய்ய தடை விதித்து அந்நாட்டு வெளியுறவுத் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியா, துருக்கி, இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த பல்வேறு நிறுவனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
2024 ஜனவரி முதல் 2025 ஜனவரி வரையிலான காலகட்டத்தில் மட்டும் ஈரானுடன் இந்தியாவின் காஞ்சன் பாலிமர்ஸ் நிறுவனம் 13 லட்சம் டாலர், அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் நிறுவனம் 8.4 கோடி டாலர், ராம்னிக்லால் எஸ் கோசாலியா & கோ நிறுவனம் 2.2 கோடி டாலர், ஜூபிடர் டை கெமிகல் பிரைவெட் லிமிடெட் 4.9 கோடி டாலர் வர்த்தகம் செய்துள்ளது.
அதேபோல், குளோபல் இண்டஸ்ட்ரியல் கெமிக்கல்ஸ் லிமிடெட் மற்றும் பெர்சிஸ்ட் பெட்ரோகெம் பிரைவேட் லிமிடெட் நிறுவனங்களும் ஈரானுடன் வர்த்தகம் செய்ததாக தடை விதிக்கப்பட்டுள்ளது.