Last Updated:
SIR பணிகளுக்கு 50 லட்சம் வாக்காளர்களை சேர்க்க 80 நாட்கள் தேவை என கொல்கத்தா உயர் நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்தது; உச்ச நீதிமன்றம் துணை பட்டியல் வெளியிட உத்தரவிட்டது.
மேற்கு வங்கத்தில் 50 லட்சம் வாக்காளர்களின் பெயர்களை சேர்க்க 80 நாட்கள் தேவை என உச்ச நீதிமன்றத்தில் கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி, அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் SIR எனும் சிறப்புத் தீவிர வாக்காளர் திருத்தப் பணிகள் தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் நீதிபதிகள் ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் அந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அதில், SIR பணிகளுக்கு 250 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு நீதிபதி சராசரியாக 250 வாக்காளர்களின் ஆவணங்களை சோதித்தாலும் 50 லட்சம் வாக்காளர்களின் ஆவணங்களை ஆய்வு செய்ய 80 நாட்கள் தேவை என்றும் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆஜரான தேர்தல் ஆணைய வழக்கறிஞர், வரும் 28-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், அதன் பின்னர் பெயர் சேர்க்கப்பட்டாலும் துணை பட்டியல் வெளியிட இயலாது என்றும் தெரிவித்தார்.
இதனை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், 28-ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்ட பின்னர், துணை பட்டியல்களை தொடர்ந்து வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், ஒடிசா, ஜார்க்கண்ட் நீதிபதிகளையும் SIR பணிகளுக்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


