• Login
Friday, August 21, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

50 கிராம் தங்க கட்டியை திடீரென விழுங்கி துடிதுடித்த சிறுமி.. அடுத்து நடந்த சம்பவம்.. துடிதுடித்த குழந்தை | 5 year old girl swallows 50 gram of gold bar in China

GenevaTimes by GenevaTimes
August 21, 2026
in இந்தியா
Reading Time: 2 mins read
0
50 கிராம் தங்க கட்டியை திடீரென விழுங்கி துடிதுடித்த சிறுமி.. அடுத்து நடந்த சம்பவம்.. துடிதுடித்த குழந்தை | 5 year old girl swallows 50 gram of gold bar in China
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


International

oi-Nantha Kumar R

Time
Published: Friday, August 21, 2026, 21:29 [IST]

பெய்ஜிங்: வீட்டில் விளையாடி கொண்டிருந்த 5 வயது நிரம்பிய சிறுமி திடீரென்று 50 கிராம் எடை கொண்ட தங்க்கட்டியை எடுத்து விழுங்கிய சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. சிறுமியின் உடல்நிலை மோசமானதால் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ‘எண்டோஸ்கோபி’ சிகிச்சையில் தங்கக்கட்டி வெளியே எடுக்கப்பட்டுள்ளது.

சீனாவின் வடக்கு பகுதியில் வசித்து வரும் தம்பதிக்கு 5 வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்த சிறுமி வீட்டில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பாள். இந்நிலையில் தான் கடந்த 16ம் தேதி சிறுமிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது.

gold bar

உடனடியாக சிறுமியை அவரது பெற்றோர் அருகே உள்ள கிளினிக்கிற்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் சிறுமியின் உடல்நலம் தேறவில்லை.

இதனால் சிறுமியிடம், பெற்றோர் தீவிரமாக விசாரித்தனர். அப்போது தான் தங்கக்கட்டியை எடுத்து விழுங்கியதாக சிறுமி கூறினார். இதை கேட்டு பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர். மருத்துவமனையில் எக்ஸ்ரே எடுத்து பார்க்கப்பட்டது. அப்போது சிறுமியின் வயிற்றில் தங்க்கட்டி இருப்பது உறுதியானது. அந்த சிறுமி வீட்டில் இருந்த 4 சென்டிமீட்டர் நீளம் கொண்ட 50 கிராம் தங்க்கட்டியை விழுங்கியது தெரியவந்தது.

தாய் மாமன் தங்க மோதிரம்.. 0.01ல் டெண்டரை தூக்கிய ஜாய் ஆலுக்காஸ்! டக்னு அதிமுக கேட்டதை கவனிச்சீங்களா?

தாய் மாமன் தங்க மோதிரம்.. 0.01ல் டெண்டரை தூக்கிய ஜாய் ஆலுக்காஸ்! டக்னு அதிமுக கேட்டதை கவனிச்சீங்களா?

உடனடியாக சிறுமியின் உடலில் இருக்கும் தங்கக்கட்டியை அகற்ற வேறு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அதற்குள் சிறுமியின் உடல்நலம் மோசமானது. சிறுமி விழுங்கிய தங்கக்கட்டி அடர்த்தியாகவும், வழுவழுப்புடனும் இருந்தது. அது செரிமான பாதையில் சிக்கும் அபாயம் இருந்தது. அதுமட்டுமின்றி உடலின் பிற உறுப்புகளை சேதப்படுத்தும் என்று டாக்டர்கள் கூறினர்.

ஆபத்தான நிலையில் இருந்த சிறுமிக்கு மருத்துவமனையில் ‘எண்டோஸ்கோபி’ (endoscopy) சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு தங்கக்கட்டி வெளியே எடுக்கப்பட்டது. சிறுமியின் வயிற்றில் தங்கக்கட்டி gastric cavity எனும் வயிற்றுக்குழியில் சிக்கியிருந்தது. இது மிகவும் குறுகிய இடமாகும். இந்த சவால்களுக்கு நடுவேயும் கூட டாக்டர்கள் எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சையின் மூலமாக தங்கக்கட்டியை வெற்றிக்கரமாக அகற்றினர்.

தங்கக்கட்டி அகற்றினாலும் கூட சிறுமி முழுமையாக குணமாகவில்லை. அவரை முழுமையாக குணப்படுத்துவதற்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகிறது.

English summary

In China where a 5 year old girl, while playing at home, suddenly swallowed a 50-gram gold bar. After her condition deteriorated and she was admitted to the hospital in critical condition, the gold bar was successfully removed through an endoscopic procedure.

Read More

Previous Post

போலி கடவுச்சீட்டுடன் கனடா செல்ல முயற்சித்த இலங்கையர் தாய்வானில் கைது

Next Post

டிசிஎஸ் ஊழியர்கள் மத்தியல் சலசலப்பு.. எதற்காக புதிய கண்காணிப்பு டூல்..? வெளியான முக்கிய தகவல்! | TCS to Install Digital User Experience Monitoring Tool Across 6 Lakh Employee Laptops: Here Is What It Tracks

Next Post
டிசிஎஸ் ஊழியர்கள் மத்தியல் சலசலப்பு.. எதற்காக புதிய கண்காணிப்பு டூல்..? வெளியான முக்கிய தகவல்! | TCS to Install Digital User Experience Monitoring Tool Across 6 Lakh Employee Laptops: Here Is What It Tracks

டிசிஎஸ் ஊழியர்கள் மத்தியல் சலசலப்பு.. எதற்காக புதிய கண்காணிப்பு டூல்..? வெளியான முக்கிய தகவல்! | TCS to Install Digital User Experience Monitoring Tool Across 6 Lakh Employee Laptops: Here Is What It Tracks

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin