• Login
Sunday, March 15, 2026
Geneva Times Tamil
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English
No Result
View All Result
Geneva Times Tamil
No Result
View All Result
  • இந்தியா
  • இலங்கை
  • சிங்கப்பூர்
  • மலேசியா
  • உலகம்
  • வணிகம்
  • விளையாட்டு
  • ஐ.நா
  • English
Home இந்தியா

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்… வாக்காளர்கள் வசதிக்காக 30 புதிய முயற்சிகள் அறிமுகம்! | India News (இந்தியா செய்திகள்)

GenevaTimes by GenevaTimes
March 15, 2026
in இந்தியா
Reading Time: 1 min read
0
5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்… வாக்காளர்கள் வசதிக்காக 30 புதிய முயற்சிகள் அறிமுகம்! | India News (இந்தியா செய்திகள்)
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter


Last Updated:Mar 15, 2026 9:44 PM IST

தமிழ்நாடு உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வெளியே செல்போன்களை வைக்க பிரத்யேக வசதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

News18
News18

ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும், வாக்காளர்களின் வசதிக்காகவும் 30 புதிய முயற்சிகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன.

தமிழ்நாடு உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார், வாக்காளர்கள் வாக்குச்சாவடிகளுக்கு வெளியே செல்போன்களை வைக்க பிரத்யேக வசதி செய்யப்படும் என்று தெரிவித்தார்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேட்பாளர்களை எளிதாக அடையாளம் காண அவர்களின் வண்ணப் புகைப்படம் இடம்பெற்று இருக்கும். கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஒரு வாக்குச்சாவடிக்கு அதிகபட்சமாக ஆயிரத்து 200 வாக்காளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டர் தொலைவிற்கு அப்பால் வேட்பாளர்கள் தங்களின் உதவி மையங்களை அமைத்துக் கொள்ளலாம் என்றும் அறிவித்தார்.

ECINet செயலி மூலம் வாக்காளர்கள் தங்களின் பெயர் சரிபார்ப்பு, வாக்குப்பதிவு நிலவரம், வேட்பாளரை அறிந்து கொள்ளுதல் போன்ற 40 வகையான வசதிகள் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாகவும் தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்தார்.

வாக்குப்பதிவு நாளில் ஒவ்வொரு இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை வாக்குப்பதிவு சதவீதம் அறிவிக்கப்படும் என்றும், சமூக வலைதளம் மூலம் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் கூறினார்.

இதேபோல் தமிழ்நாடு உட்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்குவங்க மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் 17 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாகக் கூறினார். 5 மாநிலங்களில் உள்ள 824 தொகுதிகளில் 2 லட்சத்து 19 ஆயிரம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், முதியவர்கள், மாற்றுத்திறனாளி வாக்காளர்களுக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தேனி மாவட்டத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உள்ள வெள்ளிமலை வாக்குச்சாவடிக்கு தேர்தல் அலுவலர்கள் சிரமத்திற்கு மத்தியில் சென்று பணியாற்ற இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 8 லட்சத்து 50 ஆயிரம் காவலர்கள், துணை ராணுவ படை வீரர்கள் உட்பட மொத்தம் 25 லட்சம் ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், 20 நாடுகளின் தேர்தல் ஆணைய பிரதிநிதிகள் தேர்தலைப் பார்வையிட வர உள்ளதாகவும் தலைமைத் தேர்தல் ஆணையர் கூறினார். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியின் மூலம் தகுதியற்ற யாரும் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் ஞானேஷ்குமார் தெரிவித்தார்.

Location :

Chennai [Madras],Chennai,Tamil Nadu

Read More

Previous Post

Tamilmirror Online || சிதறப்போகும் மத்திய கிழக்கு: “உடனே வெளியேறுங்கள்”

Next Post

“உணவுப் பாதுகாப்புக்கான பலஅடுக்கு திட்டத்தில் காய்கறி வளர்ப்பும் ஒரு முக்கிய பகுதியாகும் என மட் சாபு தெரிவித்துள்ளார்.” – Malaysiakini

Next Post

“உணவுப் பாதுகாப்புக்கான பலஅடுக்கு திட்டத்தில் காய்கறி வளர்ப்பும் ஒரு முக்கிய பகுதியாகும் என மட் சாபு தெரிவித்துள்ளார்.” – Malaysiakini

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Facebook Twitter Instagram Youtube LinkedIn

Explore the Geneva Times

  • About us
  • Contact us

Advertise with us:

marketing@genevatimes.ch

Contact us:

editor@genevatimes.ch

Visit us

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • சிங்கப்பூர்
    • மலேசியா
    • ⁠ஐரோப்பா
    • உலகம்
  • ஜெனீவா
  • வணிகம்
  • U- Report
  • விளையாட்டு
  • மேலும்
    • Today’s Headlines
    • ஆவணப்படம்
  • English

© 2024 Geneva Times Tamil | Desgined & Developed by Immanuel Kolwin