Last Updated:
ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை அயர்லாந்து வீரர் ஒருவர் படைத்துள்ளார்.
ஆடவருக்கான கிரிக்கெட் போட்டியில் ஐந்து பந்துகளில் ஐந்து விக்கெட் சாய்த்த முதல் வீரர் என்ற சாதனையை அயர்லாந்து வீரர் கர்டிஸ் கேம்பர் படைத்துள்ளார்.
அயர்லாந்தில் உள்ளூர் டி-20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில், டப்ளின் நகரில் நடைபெற்ற லீக் போட்டியில் மன்ஸ்டர் ரெட்ஸ், நார்த்வெஸ்ட் வாரியர்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மன்ஸ்டர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக அந்த அணியின் கேப்டன் கர்டிஸ் கேம்பர் 44 ரன்கள் விளாசினார்.
தொடர்ந்து ஆடிய நார்த்வெஸ்ட் வாரியர்ஸ் அணி 11 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 78 ரன்கள் எடுத்திருந்தது. 12 ஆவது ஓவரை கர்டிஸ் கேம்பர் வீசிய நிலையில், கடைசி 2 பந்துகளில் வில்சன், கிரஹாம் ஆகியோரை அவுட்டாக்கினார். மீண்டும் 14 ஆவது ஓவரை வீசிய கர்டிஸ், முதல் பந்தில் மெக்பிரைனை அவுட்டாக்கி ஹாட்ரிக் சாதனை படைத்தார். தொடர்ந்து 2 மற்றும் 3 ஆவது பந்தில் மில்லர், ஜோஸ் ஆகியோரை அவுட்டாக்கினார்.
இதன்மூலம் கர்டிஸ் கேம்பர் 5 பந்தில் 5 விக்கெட் சாய்த்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார். இதற்கு முன்பு இவர் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியிருந்தது கவனிக்கத்தக்கது.
July 11, 2025 12:07 PM IST


