Last Updated:
5 கிலோ மினி எல்பிஜி சிலிண்டர்களின் விலை 50 ரூபாய்க்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளது.
5 கிலோ மினி எல்பிஜி சிலிண்டர்களின் விலை 50 ரூபாய்க்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளது.
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் போர் தொடுத்த நிலையில் வளைகுடா நாடுகளில் இருந்து ஹோர்முஸ் நீரிணை வழியாக கச்சா எண்ணெய் மற்றும் எல்பிஜி எரிவாயு கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பிரீமியம் பெட்ரோல் விலையும், வணிக சிலிண்டர் விலையும் ஏற்கனவே உயர்த்தப்பட்டன. வீட்டு உபயோக சிலிண்டர் விலை மட்டும் உயர்த்தப்படவில்லை. இந்த நிலையில், வீடுகள் மற்றும் கடைகளில் பயன்படுத்தப்படும் 5 கிலோ மினி சிலிண்டர்களின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தியுள்ளன.
அடிக்கடி ஊர் மாறுவோர், தனியாக வசிப்பவர்கள் உள்ளிட்டோர் முகவரிச் சான்று உட்பட எவ்வித ஆவணமும் இன்றி, உடனுக்குடன் வாங்கக் கூடிய இந்த மினி சிலிண்டர்களின் விலை நாடு முழுவதும் 51 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையில் விலை உயர்வுக்கு முன்பு வரை 323 ரூபாய்க்கு மினி சிலிண்டர் விற்கப்பட்டது. இதேபோல், விமானங்களுக்கான எரிபொருள் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
உள்நாட்டில் இயக்கப்படும் சார்ட்டர்டு பிளைட் மற்றும் அட்டவணைப்படுத்தப்படாத விமானங்களுக்கு எரிபொருள் விலை 107 சதவீதமும், வெளிநாட்டு விமானங்களுக்கு 115 சதவீதமும் உயர்த்தப்பட்டுள்ளது. விமான எரிபொருள் விலை பரிவர்த்தனை, அமெரிக்க டாலரில் நடைபெறும் நிலையிலும், ரூபாய் மதிப்பு மிகவும் குறைந்துள்ளதாலும் விலை உயர்வு தவிர்க்க முடியாததாகிவிட்டது என மத்திய பெட்ரோலிய அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமான எரிபொருள் விலை முதல்முறையாக ஒரு கிலோ லிட்டர் 2 லட்சம் ரூபாயைக் கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


