இந்தியாவுக்கு எதிரான 5-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் 11 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது. இதில் கடந்த போட்டியில் பங்கேற்ற ஆலி ராபின்சன் நீக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், அடுத்து நடந்த 3 போட்டிகளில் இந்தியாவும் வெற்றி பெற்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது.
5-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி இமாசலபிரதேச மாநிலம் தர்மசாலாவில் நாளை தொடங்கவுள்ளது. இதற்கான 11 பேர் கொண்ட அணியை இங்கிலாந்து அறிவித்துள்ளது. பென் டக்கெட், சாக் க்ராலி, ஆலி போப், ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோவ், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ், டாம் ஹார்ட்லி, ஷோயப் பஷீர், மார்க் வூட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
இதன் அடிப்படையில் தலா 2 வேகப்பந்து மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுடன் இங்கிலாந்து அணி களம் இறங்கவுள்ளது. பேட்ஸ் மேன் ஜோ ரூட்டும் பவுலர்கள் வரிசையில் இடம்பெறுவார். இதேபோன்று கேப்டன பென் ஸ்டோக்சும் பந்து வீச வாய்ப்புள்ளது.
கடந்த போட்டியில் பங்கேற்ற ஆலி ராபின்சனுக்கு பதிலாக மார்க் வுட் அணியில் இடம்பெற்றுள்ளார். அவர் முன்பு ஐதராபாத் மற்றும் ராஜ்கோட்டில் நடந்த டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுள்ளார். ஏற்கனவே இங்கிலாந்து அணி தொடரை இழந்துள்ள நிலையில் நாளை தொடங்கும் 5 ஆவது டெஸ்டில் ஆறுதல் வெற்றி பெறுமா என்ற எதிர்பார்ப்பில் அந்த அணியின் ரசிகர்கள் உள்ளனர்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். News 18 தமிழ் : வாட்ஸ் அப் சேனலை ஃபாலோ செய்யுங்கள்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE – 46, TCCL – 57, SCV – 28, VK Digital – 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்…