ஐந்தாம் கட்ட மக்களவைத் தேர்தலில் 60.09 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தலில் இதுவரை நான்கு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ளன. இந்தநிலையில், உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார், ஒடிசா, ஜார்கண்ட் ஆகிய 6 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 49 மக்களவைத் தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.
காலை முதலே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். இந்தநிலையில், நேற்றிரவு 11.30 மணி நிலவரப்படி, ஐந்தாம் கட்ட மக்களவை தேர்தலில் 60.09 சதவிகித வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க:
சிறுபான்மையினருக்கு எதிராக நான் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை – பிரதமர் மோடி
இதில் அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் 74.65 சதவிகிதமும், குறைந்தபட்சமாக மகாராஷ்டிராவில் 54.29 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. பீகாரில் 54.85 சதவிகித வாக்குகளும், ஜம்மு-காஷ்மீரில் 56.73 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.
ஜார்க்கண்டில் 63.07 சதவிகிதமும், ஒடிசாவில் 67.59 சதவிகிதமும், உத்தரப்பிரதேசத்தில் 57.79 சதவிகிதமும், லடாக்கில் 69.62 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன.
.
&w=750&resize=750,375&ssl=1)
