Last Updated:
மரக்காணம் – புதுச்சேரி இடைய 4 வழிச்சாலை அமைக்க மத்திய அமைச்சரவை ரூ. 2,157 கோடி ஒப்புதல் அளித்துள்ளது.
மரக்காணம் – புதுச்சேரி இடைய 4 வழிச்சாலைகள் அமைப்பதற்கு, மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக மரக்காணம் – புதுவை இடையே 4 வழிச்சாலை அமைக்க கேபினட் ஒப்புதல் அளித்துள்ளது. இதற்காக ரூ. 2,157 கோடியில் இந்த சாலை அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிழக்கு கடற்கரை சாலையில் 46 கிலோ மீட்டர் தூரத்தை 20 நிமிடங்களில் கடந்து செல்ல முடியும்.
அதேபோல் புதிய வருமான வரி சட்ட திருத்த மசோதாவை மாற்றங்களுடன் மீண்டும் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட புதிய வருமான வரி மசோதாவை திரும்பப்பெற்றுவிட்டு, திருத்தப்பட்ட புதிய மசோதாவை தகுந்த நேரத்தில் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும், பிரதமர் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் எரிவாயு மானியம் வழங்குவதற்கு 12 ஆயிரம் கோடி வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. எரிவாயு மானியம் வழங்கும் எண்ணெய் நிறுவனங்களுக்கு 30 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இவை தவிர தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக நான்காயிரத்து 200 கோடி ரூபாயும், அசாம் திரிபுரா வளர்ச்சிக்காக சிறப்பு நிதியாக 4,250 கோடி ரூபாயும் வழங்க மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது.
August 08, 2025 9:33 PM IST
46 கி.மீ., தூரத்தை 20 நிமிடத்தில் கடக்கலாம்.. மரக்காணம் – புதுச்சேரி இடையே 4 வழிச்சாலை.. மத்திய அமைச்சரவை ஒப்புதல்!


