ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா அதன் வாடிக்கையாளர்களுக்கு 444 நாட்கள் கால அளவு கொண்ட அம்ருத் விருஷ்டி என்ற புதிய டேர்ம் டெபாசிட் திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இது குறித்த விளக்கமான தகவல்களை தெரிந்துகொள்ளலாம்.
இந்தியாவின் மிகப்பெரிய அரசு துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), செவ்வாய்க்கிழமை அன்று “அம்ருத் விருஷ்டி” (Amrit Vrishti) என்ற புதிய டேர்ம் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த அம்ருத் விருஷ்டி என்ற திட்டமானது 444 நாட்களுக்கு நீங்கள் செய்யும் டெபாசிட் தொகைக்கு ஒரு ஆண்டுக்கு 7.25% வட்டி விகிதத்தை அளிக்கிறது. இந்த திட்டம் ஜூலை 15, 2024 முதல் அமல்படுத்தப்பட்டது. அதுமட்டுமல்லாமல் எல்லாவற்றிற்கும் மேலாக சீனியர் சிட்டிசன்களுக்கு கூடுதலாக 0.50 சதவீத வட்டி வழங்குவதன் மூலமாக இந்த பிரிவு கஸ்டமர்களின் ரிட்டன்களை அதிகபட்சமாக்கி உள்ளது.
கஸ்டமர்களுக்கு ஆஃபர் வழங்கும் இந்த திட்டமானது அட்டகாசமான வட்டி விகிதங்களை வழங்கும் அதே நேரத்தில் இந்தியாவில் வசிக்கும் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் கஸ்டமர்கள் ஆகிய இருவருக்கும் பயன் அளிக்கும் விதத்தில் அமைந்துள்ளது என SBI ஒரு செய்தி வெளியீட்டில் கூறியுள்ளது.
இதையும் படிக்க:
ஒரே நாளில் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. எவ்வளவு தெரியுமா?
SBI அம்ருத் விருஷ்டி திட்டம் மூலமாக கஸ்டமர்கள் தங்களுடைய ரிட்டன்களை அதிகபட்சமாக்க, குறிப்பிட்ட கால அளவுக்கு தங்களுடைய முதலீடுகளை லாக் செய்து பலன் பெறலாம். டெபாசிட்டர்கள் அம்ருத் விருஷ்டி திட்டத்தில் முதலீடு செய்வதற்கு பல்வேறு சௌகரியமான இணையதளங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. SBI வங்கி கிளைகள், YONO SBI மற்றும் YONO Lite (மொபைல் பேங்கிங் அப்ளிகேஷன்கள்), மற்றும் SBI இன்டர்நெட் பேங்கிங் (INB). இதன் மூலமாக வாடிக்கையாளர்கள் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் பண பரிமாற்றங்கள் மூலமாக எளிமையான முறையில் இந்த திட்டத்தில் தங்களுடைய பணத்தை முதலீடு செய்யலாம்.
ஆனால் இந்த அம்ருத் விருஷ்டி திட்டமானது ஒரு குறிப்பிட்ட நாள் வரை மட்டுமே ஆக்டிவாக இருக்கும். அம்ருத் விருஷ்டி திட்டத்தில் பங்கு பெறுவதற்கான கடைசி தேதி மார்ச் 31, 2025. இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு ரீடைல் முதலீட்டாளர்கள் அதிக வட்டி விகிதங்களை பெறலாம் என்பதை ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கூறுகிறது.
இதையும் படிக்க:
வாரத்தில் 60 மணி நேரம் வேலை… பல சிக்கல்களை எதிர்கொள்ளும் கேப் டிரைவர்கள்!
“பல்வேறு கஸ்டமர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக அம்ருத் விருஷ்டி என்ற புதிய டேர்ம் டெபாசிட் திட்டத்தை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். எங்களுடைய மதிப்பு மிக்க கஸ்டமர்களின் செல்வத்தை பெருக்குவதை நோக்கமாக கொண்டுள்ள இந்த திட்டம் SBI வங்கியின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது,” என்று SBI, சேர்மன் தினேஷ் காரா கூறியுள்ளார்.
.
&w=750&resize=750,375&ssl=1)
