உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்றில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் இன்று மோதி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்துள்ள இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் எடுத்துள்ளது.
உலகக்கோப்பை டி20 தொடரில் சூப்பர் 8 சுற்று போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. குரூப் 2-ல் போட்டிகள் நிறைவு பெற்று அதிலிருந்து தென்னாப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
குரூப் 1 இல் வெஸ்ட் இண்டீசின் செயின்ட் லூசியாவில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து தொடக்க வீரர்களாக கேப்டன் ரோஹித் சர்மா – விராட் கோலி களத்தில் இறங்கினர்.
இந்த தொடர் முழுவதுமே சுமாராக விளையாடிய விராட் கோலி 5 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
பின்னர் ரிஷப் பந்த்துடன் இணைந்த கேப்டன் ரோஹித் ஆஸ்திரேலிய பந்து வீச்சை வெளுத்தெடுத்தார். குறிப்பாக மிட்செல் ஸ்டார்க் வீசிய ஒரு ஓவரில் மட்டும் 29 ரன்கள் எடுத்தார் ரோஹித்.
பந்த் 15 ரன்னில் ஆட்டமிழக்க 41 பந்தில் 8 சிக்சருடன் 92 ரன்கள் எடுத்து கேப்டன் ரோஹித் சர்மா வெளியேறினார். தொடர்ந்து சூர்யகுமார் 31 ரன்களும், ஷிவம் துபே 28 ரன்களும் எடுத்தனர்.
ஹர்திக் பாண்ட்யா 27 ரன்கள் சேர்க்க 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 205 ரன்கள் குவித்தது. இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கியுள்ளனர்.
.
&w=750&resize=750,375&ssl=1)
&w=1200&resize=1200,675&ssl=1)