ஏனெனில், ஈரான் அறிவிக்கப்பட்ட வரம்புகளுக்கு அப்பாற்பட்ட தாக்குதல் திறன்களை வைத்துள்ளது என்பதையும், 4000 கி.மீ தாண்டி தாக்குவதற்கான ராணுவ வலிமை தன்னிடம் உள்ளது என்பதை வெளிப்படுத்தி உள்ளது. எளிதாக புரியும்படி சொன்னால், 2,000 கி.மீ தூரம் வரை மட்டுமே சென்று தாக்கும் ஏவுகணைகள் மட்டுமே ஈரானிடம் உள்ளது என நினைத்த மேற்கத்திய நாடுகளை இந்த ஒரு ஏவுகணை தாக்குதல் மூலம் ஈரான் மிரளவிட்டுள்ளது.

