Last Updated:
இந்தியாவின் மிகப்பெரிய மருந்து நிறுவனமான சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸின் நிறுவனர் திலீப் சங்வியின் மகள் விதி சங்வி ஆவார். இவர் வளர்ந்து வரும் தொழிலதிபராகவும், சமூக ஆர்வலராகவும் திகழ்கிறார். அவரது தலைமைத்துவம் மற்றும் வணிக அணுகுமுறையானது, அவரை சுகாதாரத் துறை வணிகத்தில் ஒரு செல்வாக்குமிக்க நபராக மாற்றியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய மருந்து நிறுவனமான சன் பார்மாசூட்டிகல் இண்டஸ்ட்ரீஸின் நிறுவனர் திலீப் சங்வியின் மகள் விதி சங்வி ஆவார். இவர் வளர்ந்து வரும் தொழிலதிபராகவும், சமூக ஆர்வலராகவும் திகழ்கிறார். அவரது தலைமைத்துவம் மற்றும் வணிக அணுகுமுறையானது, அவரை சுகாதாரத் துறை வணிகத்தில் ஒரு செல்வாக்குமிக்க நபராக மாற்றியுள்ளது.
29 பில்லியன் டாலர்கள் அதாவது சுமார் ரூ.2,46,658 கோடி மதிப்புள்ள தனிப்பட்ட சொத்துக்கு சொந்தக்காரரான திலீப் சங்வி, 1983 ஆம் ஆண்டில் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கி சன் பார்மாவுக்கு அடித்தளம் அமைத்தார். இன்று அவரது நிறுவனம் உலகின் நான்காவது பெரிய மருந்து நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் சந்தை மதிப்பு ரூ.4 லட்சம் கோடியாக இருந்தது. ஃபோர்ப்ஸ் இன், பிப்ரவரி 19 நிலவரப்படி, 26.1 பில்லியன் அமெரிக்க டாலர்களின் நிகர மதிப்புடன் நாட்டின் பணக்கார பார்மா மேன், விதி சங்வி ஆவார் என்று அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அவரது மகளான விதி சங்வி, கன்சுமர் ஹெல்த்கேர் மற்றும் நியூட்ரிஷன் மற்றும் இந்தியன் டிஸ்ட்ரிபியூஷன் ஆஃப் சன் பார்மாவின் தலைவராகவும் உள்ளார். இளம் தொழிலதிபரான இவர், பத்து ஆண்டுகளுக்கு மேலாக நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். நிறுவனத்தின் இணையதளத்தின்படி, அவர் சன் பார்மா அட்வான்ஸ்டு ரிசர்ச் கம்பெனி லிமிடெட் (SPARC) இன் நான் எக்ஸிக்யூடிவ் டைரக்டர் ஆக உள்ளார்.
பென்சில்வேனியா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்ற விதி, படிப்பை முடித்ததும் சன் பார்மாவில் சேர்ந்தார். மருந்துத் துறையின் சிக்கல்களைப் புரிந்துகொண்டு, நிறுவனத்துக்காக சிறந்த முடிவுகளை எடுப்பதற்கான தந்திரங்களை தந்தையிடமிருந்து கற்றுக்கொண்டார். சன் பார்மாவில் மார்க்கெட்டிங் பிரிவில் இருந்து தொடங்கிய விதி, அந்த நிறுவனத்தில் உயர் பதவிகளை வகித்தார்.
விதி சங்வியின் தலைமையின் கீழ், சன் பார்மா 100க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது இருப்பை நிலைநிறுத்தியுள்ளது. அதன் 43 உற்பத்தி யூனிட்கள் ஆனது உயர்தர மற்றும் மலிவு விலையில் மருந்துகளை விற்பனை செய்கின்றன. வியாபாரத்தில் மட்டுமின்றி சமூகத் துறையிலும் அவர் முன்னிலை வகிக்கிறார். அவர் மான் டாக்ஸ் என்ற இலாப நோக்கற்ற அமைப்பை நிறுவினார். இந்த அமைப்பு மனநலம் குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு உதவுகிறது.
அவரது சகோதரர் ஆலோக் சங்வியும் குடும்ப வணிகத்தில் சீஃப் ஆப்பரேட்டிவ் ஆஃபீசராக (COO) பணிபுரிகிறார். விதி சங்வி கோவா தொழிலதிபர் விவேக் சல்கோன்கரை மணந்தார். கணவரின் சொந்தத்தை வைத்துப் பார்க்கும்போது, விதி சங்வி ஒரு விதத்தில் முகேஷ் அம்பானியின் உறவினர் என்பது குறிப்பிடதக்கது.
February 28, 2025 8:58 AM IST
4 லட்சம் கோடி மதிப்பிலான நிறுவனத்தினை வெற்றிகரமாக வழிநடத்தி செல்லும் பெண்.. யார் தெரியுமா?


