கடந்த 4 மாதங்களில் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகள் மற்றும் மாவட்டங்களில் அனைத்து கட்சிக் கூட்டங்களை தோ்தல் ஆணையம் நடத்தியதோடு, அனைத்து மாநில தலைமைத் தோ்தல் அதிகாரிகளுடனும் ஆலோசனை மேற்கொண்டது. அரசியல் கட்சித் தலைவா்கள் உள்பட 28,000 பேருடன் 5,000 சந்திப்புகளை இந்த 4 மாதங்களில் தோ்தல் ஆணையம் மேற்கொண்டது.